திரையுலகம்,முதன்மை செய்திகள் சந்தானம் மாதிரி ஒரு நண்பன் இல்லையே…

சந்தானம் மாதிரி ஒரு நண்பன் இல்லையே…

சந்தானம் மாதிரி ஒரு நண்பன் இல்லையே… post thumbnail image
சந்தனத்துடன் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தில் நடித்த சேது வேறு யாரும் இல்லை, அவர் சந்தானத்தின் பள்ளி பருவத்து நண்பர், அவரை கதாநாயகன் ஆக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக தான் பவர் ஸ்டாருடன் இணைந்து அந்த திரைப்படத்தை வெற்றிப் படமாக உருவாக உழைத்திருக்கிறார் சந்தானம். ஆனால், அந்த படம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட உடனடியாக சேதுவுக்கு புதிய படங்கள் எதுவும் கிடைக்க வில்லை. அதனால் சற்று தடுமாறிய சந்தானம் என் நன்பேண்டா…என்று திரைப்படத்தில் மட்டும் சொல்வது இல்லை போல் தெரிகிறது. நண்பனை வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என்று களமிறங்கிய அவர் “வாலிபராஜா” என்ற திரைப்படத்தில் அவருடன் இணைந்துள்ளர்.

இதில் இன்னோர் முக்கியமான விஷயம் என்னவென்றால் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” பட நாயகி விசாகா சிங்கையும் சேர்த்து கூட்டணி அமைத்துள்ளாராம். அது ஒரு வெற்றி கூட்டணி என்று ஏதேனும் ஒரு நினைப்பு இருக்கலாம். அப்புறம் பவர் ஸ்டார் எங்கே என்றால்… பவர் ஸ்டாரை கண்டால் சந்தானம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவது எல்லோருக்கும் தெரிந்த கதை…அதனால் பவர் ஸ்டாரை இந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். சந்தனத்தின் இப்போதைய வழக்கப்படி அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” , “வணக்கம் சென்னை” ஆகிய படங்களில் எப்படி அந்த படத்தின் கதாநாயகர்களுக்கு காதலிக்க திட்டம் போட்டு கொடுப்பாரோ அதே போல், இந்த படத்திலும் சேதுவுக்கு காதல் செய்ய பல அருமையான திட்டங்களை போட்டு கொடுக்கும் நகைச்சுவை கலந்த முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறாராம். “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் பட நாயகி விசாகா சிங்குடன் முழுதாக ஆட முடியாமல் போன காதல் பாடலை ஒரு புதுமுக நடிகையுடன் இந்த படத்தில் போடா முடிவெடுத்து ஒரு புது முக நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல். ம்ம்ம்…ஆசை யாரை விட்டது…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி