திரையுலகம்,முதன்மை செய்திகள் இது தல அஜீத் ஏரியா…85%..உள்ள வராதே!

இது தல அஜீத் ஏரியா…85%..உள்ள வராதே!

இது தல அஜீத் ஏரியா…85%..உள்ள வராதே! post thumbnail image
“தல” அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த “ஆரம்பம்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் 31ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. ஆரம்பத்தை அதிக அரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருகின்றான. தீடீர் என இயக்குனர் செல்வாராகவனின் “இரண்டாம் உலகம்” திரைப்படம் தீபாவளி போட்டியில் இருந்து கடைசி நிமிடத்தில் கழன்று கொள்ள அந்த திரைபடத்தை வெளியிடுவதாக இருந்த அரங்குகளை பிடிக்க கடும் போட்டா போட்டி நடந்து கொண்டிருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டூடியோ கிரீன், அதன் சொந்த படைப்பான “ஆல் இன் ஆல் அழகுராஜா” -வுக்கு ஏற்கெனவே பல திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து முன் பதிவுகளையும் ஆரம்பித்து விட்டது.

அந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக தல அஜீத்தின் “ஆரம்பம்” தன் வேலைகளை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பம் திரைப்படத்துக்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்களிடம் சின்ன தயக்கம் இருந்தது ஆனால் இப்பொழுது அந்த பிரச்சனை முடிந்து விட்டதால் அதிவேகமாக மீண்டும் அரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருகிறது. சென்னை மாநகரத்தில் இதுவரை சத்யம், ஜநாக்ஸ், உதயம், எஸ்கேப், அபிராமி, தேவி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர்,வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட இருபது திரையரங்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 85 சதவிகித அரங்குகளில் “தல” யின் ஆட்டம் ஆரம்பம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி