திரையுலகம்,முதன்மை செய்திகள் மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…

மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…

மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா… post thumbnail image

நம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற ஒரு போர் வீரரைப் பற்றிய சரித்திரப் படம் தான் இந்த மருதநாயகம்.

பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் கையால் தொடங்கி வைக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. கோடம்பாக்கத்தின் அணைத்து முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட பெரிய திரையுலக விழாவாக இருந்தது அன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் 50 கோடி தேவைப்படுவதாக கமல் அறிவித்திருந்தார்.. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த படப்பிடிப்பு நிதிச் சிக்கலில் விழ திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்தப் படத்தை தயாரிக்கும் அளவு சூழல் உருவானதும் மீண்டும் படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் அறிவிக்க அத்தோடு அந்த திரைப்படம் செய்திகளில் அடிபடுவது குறைந்தது, இருந்த போதிலும் சில பல சமயங்களில் கமல் ஏதாவது அந்த படத்தை பற்றி அங்கும் இங்குமாக சொல்லி கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. தற்போது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார்.

விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம். எனவே, லிங்குசாமி படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.

இந்த செய்தி உண்மையா என்பது போக போக தெரியும்…ஆனால் கமலஹாசன் இயக்கத்தில் அது போன்ற ஒரு சரித்திர படம் பார்க்க வேண்டும் என்பது உங்களை போல அனைத்து கோடம்பாக்க ரசிகர்களுக்கும் நிச்சயம் இருக்கும்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி