திரையுலகம்,முதன்மை செய்திகள் பவர்ஸ்டாரை டெரர் ஆக்கிய சிவகாசி சம்பவம்

பவர்ஸ்டாரை டெரர் ஆக்கிய சிவகாசி சம்பவம்

Tamil powerstar Strinivaasan

காணொளி:-

நம்ம பவர்ஸ்டார் நிதி மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர் மனுதாரரின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பவர்ஸ்டார் யார் தெரியமா தமிழ் ரசிக பெருமக்களுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமான லத்திகாவை கொடுத்தவர். இந்த திரைப்படத்தை தயாரி்த்து, இயக்கியதுடன் தானே ஹீரோவாகவும் நடித்து சராசரி தமிழ் ரசிகனை டெரர் ஆகியவர். மிக சாதாரண சீனிவாசனாக இருந்த அவர் தன் பெயருக்கு முன்னால் பவர் ஸ்டார் என்னும் பட்டத்தை சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இணையாக்கி கோடம்பாக்கத்தை ஒரு வழி பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

அவரது பிரதாபங்களை ஃபேஸ்புக், யூ டியூப் ஆகிய ஊடகங்களில் கொஞ்சமும் சளைக்காமல் அவரது உயிரினும் மேலான ரசிகர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சளைக்காமல் படங்கள் எடுத்து நடிக்கும் அவர் அடுத்ததாக ஆனந்த தொல்லை என்ற படத்தின் மூலம் நம்மையெல்லாம் விரைவில் சந்திக்கவிருக்கிறார். தாஸ் என்பவரிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ. 9 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், தாஸின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு அள்ளிக் கொண்டு போய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை பார்த்து கொண்டிருத்த பவர்ஸ்டார் டெரர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவமும் கூடிய விரைவில் ஊடகங்களில் சக்கை போடு போடலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.