சோதிடம்,முதன்மை செய்திகள் எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி

எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி

Kanni raasi

காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள கன்னி ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழிநலம்!!!

நவக்கிரகங்களில் வித்யாகரகன் கல்விக்குஅதிபதி என்றுபோற்றப்படும் ஸ்ரீபுத பகவானை ஆட்சி கிரகமாகவும், வீடாகவும், ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற 4,7க்குடைய சுகசப் தமாதிபதியாகிய ஸ்ரீ குருபகவான் இதுவரையில் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப் படி உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானமும் எட்டாமிடமுமான மேஷராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானமும,; ஒன்பதாமிடமுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

நீங்கள் புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். எனவே, புத்திசாலித்தனத்திற்கு சொந்தக்காரர்கள். மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போடுவதில் பலே கெட்டிக்காரர்களாக நீங்கள் விளங்கினாலும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் பெரிய அளவில் சந்தித்து விடு வீர்கள். வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அதிகபட்சமான பொருத்தம் இருப்பதோடு, திருமண நாள் குறிக்கும் பொழுதும், பொருத்தமான நாளாக அமைந்தால் தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும்.

முயற்சியை முதுகெலும்பாகக் கொண்டவர்களே! குடிசையில் வாழ்ந்தாலும் கோபுரமாய் சிந்திப்பவர்களே! எதிலும் அழகையும் நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.சிந்திக்காமலேயே செயல்பட்டு சிறப்பினைஅடைவீர்கள் உங்கள் வாழ்க்கையில் அத்தனை தன்மையிலும் நடுத்தர வாழ்க்கை நடத்துபவராக இருக்க வேண்டிய நிலைகளில் வாழ்ந்து வருவீர்கள். எதுவும் உங்களால் முடியும் என்பதனை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

பொதுப்பலன்கள்

ஒன்பதாமிடகுருவால் ஒகோவென்று கோபுரம் போல் வாழ்வு உயரும்
பிரமிக்கும் யோகப்பலன்களால் வசந்தகாலம் நோக்கி பயணிப்பீர்.
சனி சஞ்சாரம் வாழ்க்கையில் அற்புத யோகபலன்கள்; நிலவும்
பாம்புகிரகங்களான ராகு-கேது சஞ்சாரம் வெற்றி மீது கீர்த்தி சேர்க்கும்

ஸ்ரீ குருபகவான் இப்போது பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாமிடத்திற்கு வந்திருக்கிறார். ஒன்பதாமிடம் என்பது குருவுக்கு ராஜ சிம்மாசனம் மாதிரி.அதுவும் குரு ரிஷபத்திலே உச்சம் பெறுவதால் ஓடிப் போனவருக்கு ஒன்பதுல குரு என்பது உங்களுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.எனவே குரு உங்களை காப்பாற்றுவார்.ஒருபடி உயர்த்துவார்.சிறப்பிப்பார் என்பது அற்புதமான அதிசயம் இது. இந்த குரு பெயர்ச்சியை வழி நடத்திச் செல்லும் குருவோடு முக்கிய கிரகங்களான ராகு, கேது, சனியும் சேர்ந்து முனைப்புடன் செயல்பட இருக்கிறது. இதுவரையிலிருந்த குரு பெயர்ச்சி யோகப்பலன்களை வாரி வழங்கவில்லை என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு உயரப் போகிறீர்கள்.ஆஹா! கேட்கவே இனிமையாக இருக்கிறதே என்கீறீர்களா? நிஜம் தான் குரு உங்களை உயர்த்தப் போகிறார். உப்பரிகையில் வாழ வைக்கப் போகிறார். இது நிச்சயமாகத்தான் போகிறது! உங்களுக்கு மித மிஞ்சிய பொருளாதார வசதியில் உயர்த்தப் போகிறார். ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும் என்பதால் பெருத்த யோகம் கிட்டிடும். இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைப் பாதையில் இந்த காலகட்டத்தை ஒரு பொற்காலமென்றே கூறலாம்.இனி உங் களை யாராலும் எட்டிப்பிடிக்கமுடியாதஉயரத்திற்கு சென்று நீங்கள் கொடிகட்டி பறப்பீர்கள்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலவரங்களை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 5,6 ஆகிய இடங்களுக்கு உரியவரும் யோகாதிபதியும், ரோகாதிபதியுமான ஸ்ரீ சனிபகவான் தொடர்ந்து தனகுடும்ப வாக்குஸ்தானமாகிய இரண்டாமிடமான துலாம் ராசியில் தொடர்ந்து சஞ்சாரம் செய்கிறார்.

இந்த ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரை நாட்டுச் சனியின் நடப்பால் மூன்றாவது கட்டமான பாதச் சனி என்று சொல்லலாம். ஸ்ரீசனிபகவான் தனகுடும்ப வாக்குஸ்தானமும் இரண்டாமிடமுமான துலாம் ராசியில் சஞ்சரிப்பது நல்லதல்ல. ஆனால் இதுவரை உங்களைப் பிடித்திருந்த ஜென்மச் சனி விலகியது மட்டுமல்ல. ஜென்ம சனிக்கு இந்த இரண்டாமிடமான சனி எவ்வளவோ தேவலாம். பொதுவாக பாதிப்பைவிட நன்மைகளே ஏற்படக்கூடும் என்பதைப் பற்றி சிறிது சிந்தித்து ஆராய்ந்துப் பார்க்கலாம்.

தன சுத விஹ திம் என்று பல தீபிகைகாரர் இரண்டில் சனி பண விரயம், குழந்தைகளுக்கு அரிஷ்டம் இவற்றை ஏற்படுத்துவார் என்று கூறுகிறார்.

ஸ்ரீ சனி பகவான் இரண்டில் வரும்போது மனிதனுடைய தோற்றம் பொலிவும் களையும் இழக்கிறது. பலம் – தைரியம் குறைகிறது மகிழ்ச்சி இல்லாமல் போகிறது. மற்ற வழிகளில் இது சமயம் பொருள் வரவு இருந்தாலும் மூங்கில் இலையில் விழும் மழை நீர்; போல தங்காமல் போய் விடுகிறது. இதனுடன் வேண்டாத இடமாற்றம் வீண் விரயம் இவையும் ஏற்படும் என்று யவனாசார்யர் கூறுகிறார்.

வருஷாதி நூல் கருத்துப்படி இரண்டில் ஸ்ரீ சனி பகவானின் சஞ்சாரம் தன நாசம், சஷ்டம், மானபங்கம், உயிர்ச்சேதம் (மாரக தரை நடந்து 3-ம் சுற்று ஏழரை சனியாகவுமானால்) சிறை பயம், புத்தி கலக்கம், மோசம் போதல் போன்ற பல வகையும் தீய பலன் ஏற்படுகிறது.

ஆனால் மேலே அங்க சனி பலனைப் போலவே புலிப்பாணி சித்தர் கூறுவது போல் சனி இரண்டில் வரும்போது அதாவது ஏழரை சனி கடைப்பகுதியில் முன்னேற்றம் சௌக்யம் உண்டாகும் ஆண்களுக்கு விரும்பிய இடத்தில் திருமணம் கூடும். பெண்கள் மூலம் தனம் சேரும். இப்படி பல வகையிலும் இக்கடைப்பகுதியில் நன்மையே உண்டாகும் என்று கொள்ள வேண்டும்.

என்றாலும் விரயச் சனியிலும், ஜென்மச் சனியிலும் விழுந்த பின் பாதச்சனியில்தான் எழுவான் என்று ஆறுதலான பாடல் ஒன்று உள்ளது. இதற்கான ஜோதிடபாடலின் சிறப்பையும் காணலாம்.

பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு
பால்மதிக்குப் பானு மைந்தன் இரண்டில் வந்தால்
சீரப்பா மேம்பாடு சவுக்கியம் பொன்
சிவசிவா கிட்டுமடா வேட்டல் கூடும்
கூறப்பா கோதையினால் பொருளும் சேரும்
கொற்றவனே குடிநாதன் வலுவைப்பாரு
ஆரப்பா! போகருட கடாட்சத்தாலே
அப்பனே! புலிப்பாணி அறைந்திட்டேனே!

சீரும், சிறப்பும், பேரும், புகழும், பெருமையும், மதிப்பும், மரியாதையும், மேன்மையும் உண்டாகும். நினைத்தது நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிட்டிடும் என்று புலிப்பாணி முனிவரின் பாடல் உங்களை சந்தோஷக்கடலில் மிதக்க வைக்கிறது.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான பாம்பு கிரகங்களான நிழல் கிரகங்கள் யோகக்காரகனான ஸ்ரீராகு பகவானும் -ஞானக்காரகனான ஸ்ரீகேது பகவானும் உங்கள் ராசிக்கு ராகு மூன்றாமிடமும், தைர்யவீர பராக்கிரமஸ்தானமுமான விருச்சிக ராசியிலும், கேது ஒன்பதாமிடமும், பாக்கியஸ்தானமுமான ரிஷப ராசியில் தொடர்ந்து சஞ்சரிக்கின்றனர். இது நன்மைகள் அணி வகுத்து வரக்கூடிய அமைப்பான காலகட்டம். போராட்டங்களுக்கு மத்தியில் உங்களைக் காத்துக் கொள்ளும் யுக்தி, புத்தி, சிந்தனைகளுடன் கூடிய வித்தைகளை புரிந்து கொண்டு சுகமாக வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள். இனி நல்ல காலம் பிறந்து விட்டது என்று சொல்வதை விட கஷ்டகாலம் சோதனைக் காலம் நீங்கிவிட்டது என்றே கூறலாம்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம்தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம்தேதி 2012 ஆம் ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் ஸ்ரீ ராகுபகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசிமாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்றை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீராகுபகவானும்,அதேநேரம் ஸ்ரீகேது பகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம் ராசிக்கும், மேஷ ராசிக்கும் பிரவேசித்து ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

உங்க ராசிக்கு 2ல் ராகு 8ல் கேது இடம் பெறுகிறார்கள். இந்த இரண்டு இடங்களும் இவர்களுக்கு ஏற்றதல்ல. இவர்களுக்கு உகந்த ஸ்தானமல்ல. உங்கள் மகத்துவத்தை குறைக்கக்கூடும் வகையிலே இவர்களின் சஞ்சாரம் உள்ளது. மொத்தத்தில் இருபஞ்சாங் கங்களின் சித்தாந்தப்படி நம்பினோர் கைவிடமாட்டார் என்பது மாதிரி விருச்சிக ராகுவால் அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று அதிர்ஷ்டத்துக்கே தெரியாது என்பது மாதிரி வாழப்போகிறீர்கள். நீ;ங்கள் எங்கும் எதிலும், நிதானமாகவும், பொறுமையாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சார நிலவரம்

உங்கள் ராசியைப் பொறுத்தவரையில் நிலவரம் எப்படி? மேற்கொண்டு நன்மைதானே தவிர கெடுதல் எதுவுமே இல்லை. கவலைப்படாதீர்கள். ஒன்பதாமிட குருவினால் இதுவரை சூழ்ந்திருந்த இருள் நீங்கி ஒளி துவங்கும் உன்னதமான காலமாகும். எனவே இந்த ஸ்ரீகுருபகவானின் மாறுதலினால் ஏற்படக்கூடிய உங்களுடைய எதிர்கால வாழ்க்கையின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தால் படுயோகம்தான். இனிமேல் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கமாகவேதான் அடிக்கப் போகிறது என்றால் மிகையாகாது. அதிர்ஷ்டகரமான யோகப் பலன்களை எல்லாம் வாரி வழங்கும் கருணை கடல் அல்லவா அவர். பொதுவாக எந்த ஒரு ராசிக்காரர் களுக்குமே தனகாரகனும், பொன்னவனுமான ஸ்ரீகுரு பகவான் பாக்கியஸ்தானத்தில் வந்தால் பண வசதியில் ஏற்றம்தான். வாழ்க்கையில் ஏறுமுகம்தான். லட்சுமி கடாட்சம் கொழிக்கும் என்பது உறுதி. இனி உங்களை பிடிக்க முடியாத உயரத்திற்குப் போய்விடுவீர்கள் என்று அர்த்தம்.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

ஒன்பதாமிட குருவைப் பற்றி நமது முன்னோர்களும், நமது பெரியோர்களும், ஜோதிட விற்பன்னர்களும், ஜோதிட சாஸ்திரங்களும், ஜோதிட பாடல்களும் ஓலைச்சுவடியில் என்ன கூறியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.

தனிக கர்ம சித்தி, அநேக ப்ரதிஷ்டாவான் புவன ஜனபாலக
-என்பது ப்ருகு முனிவரின் சூத்திரம்.ஒன்பதாமிடத்து குரு எப்போதும் அதிர்ஷ்ட கரமான உயர்வான யோக பலன்களையே செய்வார். பணவசதி பல விதங்களிலும் அதிகரித்திடும். நல்ல காரியங்களும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பல வகையிலும் சிறந்த- சாதனைகளையும் புரியக்கூடும். பொதுமக்களின் பெருமைக்கும், பேர் புகழுக்கும் பாத்திரமாகி நாட்டிலே முக்கியத்துவமும் ஆதரவும் பெற்றும் பேர் புகழ், பெருமையுடன் திகழ முடியும். புத்திரப் பேறு மேன்மையாக அமையும் என்பது தான் இதன் பொருள்.

ஆமெனவே வியாழனுமேஇரண்டுஐந்தேழ்அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ
தாமென செல்வமொடுகுதிரைஉண்டாம்தழைக்குமே குடை தர்மதானம் ஓங்கும்
நாமெனத்தாய்தகப்பன்புதல்வராலேநன்மையாம்அருமையொடுபெருமைஉண்டாம்
போமென அரசர்க்கு நல்லோனாக்கும் புகழ் சோபனம் நடக்கும் பூமி ஆள்வன்
– என்று கோட்சார சிந்தாமணி குதூகலமாக பாடியிருக்கிறது.

குருமாறுதலைப்பற்றிய பலன்களை அறிய நீங்கள் வெகு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மேலும் சந்தோஷம் தரும் பாடல்களைக் குறிப்பிடுகிறேன்.

குருபதினோறேழ் ஒன்பான் கூறுமைத் திடத்தில் நிற்க
திருமகள் கிருபையுண்டாம் தீர்த்த யாத்திரையும் உண்டாம்
தான தர்மங்களுண்டாம் தந்தை தாய் உதவியுண்டாம்
அருமை பெருமையுண்டாம் அரசர் சேவையுண்டாமே?
– இந்த பழம்பெரும் ஜோதிடப்பாடல் மனத்துக்கு உற்சாகத்தை ஊக்குவிக்கிறது.

மன்னன் நவமேறில் ஆசாரன் மன்னன் ஞானி அன்றும்
மன்னனாலே லாபமுள்ளான் மாநிலத்தில் ஓங்கி நிற்பான் தாயே!
– என்று தான் புலிப்பாணி முனிவரும் பாடியிருக்கிறார்.

பெருபதினொன்றைந் தேழ்பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ
குருவரில் செல்வம் சீருர் குதிரை வெண்குடை தீவர்த்தி
தருமமும் தானமுண்டு தாய்தந்தை துணையும் உண்டாம்
அருமையும் பெருமையுண்டாம் அரசர் சேவையும் உண்டாமே!
– என்று சந்தோஷம் தரும் வகையில் வருஷாதி நூலும் வர்ணித்திருக்கிறது.

பல தீபிகை என்ற ஜோதிட நூல், ஒன்பதாமிடத்தில் ஸ்ரீகுருபகவான் வந்து சஞ்சரிக்கும் காலத்தின் போது சகலசௌபாக்கியங்களும் உண்டாகும் என்பதை பாக்யே ஜீவே சர்வஸள பாக்யசித்தி – என்று ஒரே வரியில் சொல்லி ஆனந்தமாக இருந்திட மனத்தை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

இனி யோகம் தரும் பலன்கள் ஏராளம்! ஏராளம்!! ஏராளம்!!! அமோகம்தான். நல்லகாலம் பிறந்துவிட்டது. நீங்கள் நினைத்தது யாவும் நடக்கப் போகிறது. நினைக்காததும் நடக்கப்போகிறது உங்களை பிரமிப்பில் சந்தோஷக் கடலில் ஆழ்த்திவிடக் கூடிய அளவுக்கு நடக்கப்போகிறது.ஒன்பதாமிட குருவுக்கு இவ்வளவு சக்தியுண்டு.இதைப் போகப் போகத்தான் நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். எனவே திட்டமிடுங்கள். யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். இப்படியொரு அருமையான காலகட்டம் மறுபடியும் வராது.

முயற்சிக்கும் காரியங்களில் இழுபறியாகவும் முட்டுக் கட்டையாகவும் அல்லலும், அலைக்கழிப்பும்,அனாவசியவிரயங்களும் இருந்த நிலையில் நல்ல மாறுதல்கள் உண் டாகும்.. ஜீவன சம்பந்தமான வகையில் இருந்து வந்த கஷ்டமும், நஷ்டமுமான நிலவரம் மாறி முன்னேற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கலாம். அரசாங்க அரசியல் வகையிலும் அனுகூலம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டிடும்.

பொருளாதாரம் இனிமேல் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை. பணவசதியில் அபிவிருத்தி ஏற்படும்.கணிசமாகவும்,தாராளமாகவும், சரளமாகவும் பெருந் தொகையாகவும் பணம் புரளும். வராது என தீர்மானித்து கைவிடப்பட்ட பணமும் எதிர்பாராத வகையில் வந்து சேரும். பூர்வீக சொத்திலி ருந்து ஆதாயம் கிட்டுவது போன்ற வருமானம் பெருகும்.

செய்தொழில், வியாபாரம், வணிகம் எதுவானாலும் லாபகரமான வருமானம் பெருக்கம் கூடுதலாகும். பெரும் தொகையாகவும் ஒதுக்கிக் கொள்ளவும் ஞாயமுண்டு. புதிய ஒப்பந் ;தங்களும் புதியமுயற்சிகள் வகையில் கூடுதலான ஆதாயமும் கிட்டிடும்.சுயதொழில் செய்யும் படித்து பட்டம்பெற்ற பட்டதாரிகளுக்கு முன்னேற்றமானஅபிவிருத்தி உண்டாகும். முயற்சிகளில் இறங்கினாலும் கூடசோடை போகாமல் அபரிமிதமான லாபம கிடைக்கும்.

குடும்பத்தில் சகலசௌபாக்கியங்களும் அதிகரிப்பதோடு வாழ்க்கை நிலவரத்திலேயும் முடிந்த வரை நிறைந்த மாறுதலான மறுமலர்ச்சி உண்டாகும். பணம் கணிசமாக புழங்கும். ஸ்ரீகுருபகவான் களத்திரக்காரனாவதால் கல்யாணத்தில் முட்டுக்கட்டைகள் பிரச்னைகள் விலகி, தடை தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு திருமண ப்ராப்தமும் கைகூடும். சுபகாரியங்களுக்கு விருந்து விசேஷமும் நடக்கும். மனைவி மக்களை பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இனி ஒன்றுபட்டு வாழ்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:- உங்களை ஒரு மாதிரியாக பேசியவர்களெல்லாம் அபிப் ;பிராயத்தை மாற்றிக்கொள்வார்கள். பேச்சில் மட்டும் பொறுமையும் நிதானமும் வேண்டும்.

மாணவர்களுக்கு:- கல்வியில் ஆர்வமும், அக்கறையும், மறுமலர்ச்சி தெரியும். சிலர் உயர்படிப்புக்கும் தொழில் படிப்புக்கும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

வியாபாரிகளுக்கு:- இனிமேல் நல்ல அதிர்ஷ்டகரமான லாபகரமான வருமானப் பெருக்கத்துடன் சம்பாதிப்பீர்கள். ஏதாவது இடமாறுதலோ வியாபாரமாறுதலோ ஏற்படும.;

தொழிலாளர்களுக்கு:- கடும்பாடு குறைந்துவிடும். நல்ல முன்னேற்றம்தான். படும் பாட்டிற்கேற்ப பலனைத்தேற்றிக் கொள்ளலாம். முன்னேற்ற மடையலாம்.

கலைஞர்களுக்கு:- இனி உங்களது பேரும், புகழும், பிரபலமாகும். கணிசமான வருமானம் பெருகும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகளுக்கு:- மக்களின் ஆதரவும் பெருகும். கணிசமாக பணவசதி யும் உயரும். ஸ்திர சொத்துக்களும் வண்டி, வாகன வசதிகளும் கிட்டிடும்.

பெண்களுக்கு:- இனிமேல் உங்களுக்கு பிரமாதமான யோகக்காலம் ஆரம் பமாகிவிடும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து பெருமையடைய ஞாயமுண்டு.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஸ்ரீகுருபகவானின் மூன்று பார்வைகளில் ஒரு பார்வையான ஐந்தாம் பார்வை உங்களுடைய ஜென்ம ராசியான கன்னியின் மேலேயே ஒளி வீசுவதால் தெம்பும், உற்சாகமாக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். கவாச்சியாக தோன்றுவீர்கள். உள்ளத்திலும் ஊக்கமும். உயர்வான நோக்கமும் தலை தூக்கும். அவரவர் வயதுக்குத் தகுந்த மாதிரி சுபகாரியங்களும் நடத்திடவும ;ஞாயமுண்டு. கல்வியில் முன்னேற்றம், புத்திக் கூர்மையால் மற்றவர்களுக்கு நடுவிலே பிரகாசமாக ஜொலிப்பீர்;கள்.குரு பார்வையால் கோல விளங்கதில் கண்ட பனிபோலத் தேயும் என்ற ஒரு பாடல் உண்டு. அதாவது சூரியனைக் கண்ட பனி போல விலகி ஒடுமாம். துன்பம் துயரங்கள் ஒடும்.இப்படி ஜென்ம ராசிக்கு குரு பார்வை வீசுவதைத்தான் குரு பலன் என்கிறோம். இது கல்யாண காட்சிகளையும ;கோலாகலமாக நடத்தி வைத்து விடும் தனிச்சிறப்பு மேலோங்கும்.

அடுத்ததாக ஸ்ரீ குருபகவானின் இன்னொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான விருச்சிகத்தில்; பிரசாசிப்பதால் உங்கள் தெம்பும், தைரியமும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியின் வேகமும் அதிகரிக்கும். உருப்படியான பல காரியங்களை செயல்படுத்துவீhகள். போட்டியும், பொறாமையும், எதிர்ப்பும், பகையும், வீண் விவகாரமும் புறமுதுகிட்டு ஒடும். வெற்றி வாய்ப்புகள் உங்களையே தேடி வரும்.

அடுத்ததாக ஸ்ரீ குரு பகவானின் மற்றொரு பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியின் ஐந்தாமிடமான மகரத்தில் புத்தி, புத்திர பூர்வ புண்ணிய ஸ்தானத்திலே வீசுவதால் உங்களுடைய மனதுக்குப் புதிய சக்தி பிறக்கும். உன்னதமான ஒரு சக்தி உயர்ந்த நோக்கத்திற்கு உந்தி செல்லும். நல்வாழ்த்தையும்; மனம் நாடும். செயல்களும் அவ்வாறே அமையும். நினைத்ததும் நடக்கும். அதிர்ஷ்டங்களும் கைகூடும். பக்திநிலை மேம்படும். மகான்களின் ஆசீர்வாதமும் திருப்திகரமாக கிடைக்கும்.

நட்சத்திரப் பலன்கள்

உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

ராஜகிரகமான சூரியனின் ஆதிக்க பலம் பெற்ற உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் எந்த மாறுதலுமின்றி இருக்கும். எதையும் அதன் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது. செய்தொழில். வியாபாரம் சீராக இருந்து வரும்.குடும்ப மகிழ்ச்சி குறைந்து தான் காணும். வேண்டியவர்களுடன் மனக்கசப்பு வரலாம். வரவும் செலவும் சரியாக இருக்கும். சிறிது மாறுதலாக இருக்கும். இழந்தவைகளை திரும்பப் பெறுவீர்கள். தடைப்பட்ட பணிகள் தானாகவே நடக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இட மாறுதல் கிடைக்கும்.நீங்கள் நினைத்தது நிறைவேறும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

சந்திரனின் ஆதிக்கம் பெற்ற ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மிகவும் அனுகூலமாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். எதிர்கால திட்டமொன்று செயல்வடிவம் பெறும். இழந்தவை களைத் திரும்பப் பெறுவீர்கள். குடும்பத்தில் காணாமல் போயிருந்த மகிழ்ச்சி மீண்டும் வந்து விடும். புதிய சொந்த வீட்டிற்கு குடி போவீர்கள். புனிதப்பயணங்கள் இருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத யோகங்களை அடைவீர்;கள். செய்தொழிலில் திடீர் அதிர்ஷ்ட திருப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். மிகப் பெரிய திருப்பம் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்.

சித்திரை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் சாதகமாகவே இருக்கும். கடந்த கால நெருக்கடிகள், தொல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பழைய சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய திட்டங்களைச் செயல் ;படுத்தத் தயாராக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய மாறுதல் நிகழவிருக்கிறது. கூடவே பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகஸ்தர்களின் சோதனைக்கு விடிவுகாலம் வந்து விட்டது. சிந்தித்து செயல்பட வைக்கும். நீங்கள் எதிர்பார்க்;கும் உதவிகள் கிடைக்கும். பேராசை மட்டும் வேண்டாம். குடும்பத்தில் சிலரது போக்கு விசித்திரமாக இருக்கும்.

மாதவாரியாகப் பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – இந்தக்காலக்கட்டம் உங்களுக்கு மனத் தெளிவை உண்டாக்கும். எதை செய்யலாம். எதைச்செய்யக்கூடாது என்று தெரிந்து கொள் வீர்கள். முயற்சி கள் கைகூடும். செய்தொழில், வியாபாரத்தில் புதுபுது ஐடியாக்கள் தோன்றும். உத்தியோகத்தில் மாறுதல்கள் இருக்கும். விரும்பிய குடும்ப வாழ்க்கை சிலருக்கு அமையும். குடும்ப வசதிகள் பெருகும்.பணவசதி கணிசமாக புரளும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக்காலக் கட்டம் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும். நீங்கள் துணிச்சலாக தைரியமாக எதையும் செய்வீர்கள். எதிர்கால திட்டமொன்று கூடிவரும். இதற்கு தேவையான பக்கபலம் எப்படியும் கிடைத்துவிடும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிட்டிடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு கிடைக்கும்.புதிய வீடு, மனை, நிலம் வாங்குவீர்கள்.

ஜூலை – 1-7-2012 முதல ;31-7-2012 வரை – இந்தக்காலக்கட்டம் அதிர்ஷ்டமானதாகவே இருக்கும். தரணி ஆளப் பிறந்த நீங்கள் ஏதாவது ஒரு வகையில் உயர்வடைவீர்கள். பேரும், புகழும், பெருமையும்அடைவீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபகரமான வருமானப்பெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ் தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை – இக்காலக்கட்டம் மகிழ்ச்சி அளிக்கும்; நல்ல காலமேயாகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். வெளிநாட்டு உதவி பெற்ற தொழில்கள் மூலம் அதிக லாபம், கடன்கள் பைசலாகும். அரசாங்க ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் எதுவும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. செய்தொழில், வியாபாரம், வணிகம் எது வானாலும் சிறப்பானதே.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை – இந்தக்காலக்கட்டம் உங்களை மேலும் நிமிர்ந்து நிற்கச் செய்யும். இழந்தவைகள் திரும்பக் கிடைக்கும். செய்தொழில், வியாபாரத்தில் நல்ல மாறுதலான திடீர் திருப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இலாகா மாறுதலும் ஏற்படும். அரசாங்க சலுகைகள் ஆதரவு அனுகூலம் கிட்டி டும்.வாக்குவாதங்களை தவிர்க்கவும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இந்தக்காலக்கட்டம் திட்டபணிகள் நடக்கும். சுய முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டிடும். செய்தொழில், வியாபாரம், லாபகரமான வருமானப் பெருக்கத்துடன் அமோகமாக நடைபெறும். முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி – எண்ணியவை ஈடேறும். அதிக வருமானம்-செல்வாக்கு-பரிமளிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை- இந்தக்காலக்கட்டம் நம்பிக்கை ஊட்டுவதாகவே அமையும். மனதில் ஊசலாடிக் கொண்டிருந்த பழைய சங்கடங்களும் சஞ்சலங்களும் மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். செய்தொழில், வியாபாரத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியையும், தெம்பையும், உற்சாகத்தையும் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு நம்பிக்கையான செய்திகள் வரும்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக்கட்டம் பழைய குருடி கதவைத்திறடி கதைதான் நீடிக்கும். நினைப்பது நடப்பது கடினம். ஓரளவுக்கு அலைக்கழிக்கும். தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள். செய்தொழில், வியாபாரத்திலும் மந்தநிலையும், புதிய நெருக்கடிகள், கெடுபிடிகள் உருவாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சுணக்கமாகும்.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இந்தக்காலக்கட்டத்தில் பழைய சுறுசுறுப்பும், முயற்சிகளில் விறுவிறுப்பும் வேகமும் வந்துவிடும். நினைத்த காரியங்கள் நடைபெறும். வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளில் ஈடுபடுவீர்கள். செய்தொழில், வியாபார நெருக்கடி, கெடுபிடி தீர்ந்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத மாறுதல்கள் உண்டாகும். புதிய வரவொன்று எதிர்பார்க்கலாம்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இக்காலகட்டங்களில் நல்லதையே நினைப்பீர்கள். நல்லதையே செய்வீர்கள்.நல்லவர்களுடன் நட்பு உண்டாகும்.பேர், புகழ், பெருமை, செல்வாக்கு, சொல்வாக்கு, அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டிடும். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகமான சூழ்நிலையே தென்படுகிறது. சந்ததிகள் பற்றிய விவகாரங்கள்-சுபவிசேஷங்கள் சிறப்பாக இருக்கும்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இந்தக்காலகட்டம் ஒரளவு சாதகமாகத்தான் இருக்கும். நியாயமாக கிடைக்க வேண் டியது தீவிர முயற்சியின் பேரில் தான் கிட்டிடும். செய்தொழில், வியாபாரத்திலும் மாற்றம் எதுவும் இருக்காது. உத்தியோகஸ்தர் களுக்கு இடமாறுதலோ, இலாகா மாறுதலோ, ஊர்மாறுதலோ, இருக்கும். குடும்பத்தில் சிறுஅதிர்ச்சிகள் அல்லது ஏமாற்றங்கள் கவலையைத் ;தரலாம்.

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இக்காலகட்டத்தில் எல்லா வகையிலும் விழிப்படைய செய்வதாகவே இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் செய்துவிடக் கூடாது.எதிர்கால திட்டமொன்றை பற்றி தீவிரமாக சிந்திப்பீர்கள்.புதிய முயற்சிகளை செய்வதைவிட கையிலிருப்பதை சீர்திருத்தம் செய்வது நல்லது.உத்தியோகஸ்தர் ;களுக்குஅலைச்சல், திரிச்சல் இருக்கும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இக்கால கட்டத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பதட்ட நிலை இருந்தாலும் கடைசியில் எதுவும் நடக்காது. செய்தொழில், வியாபாரத்தில் சிறிய அளவில் மாறுதல்கள் இருக்கும். இடமும் மாறுதல் அடையக்கூடும். செலவுகளை சமாளிக்க பணம் எப்படியோ வந்துக் கொண்டிருக்கும். நண்பர்களில் சிலர் விரோதிகளாவது தவிர்க்க முடியாத தாக இருக்கும்.

பொதுவாக இந்த குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டகரமான யோகம் தரக்கூடிய நன்மைகள் அதிகரிக்கும். இழந்தவைகளை திரும்பப் பெறுவதோடு தெம்பும், உற்சாகமும், உண்டாகும். வாழ்க்கையில் வளமும், சந்தோஷமும், கூடுதலாகும். அற்புதங்கள் அதிகரிக்கும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலமிது.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.