திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்…வதந்தியா…உண்மையா…

ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்…வதந்தியா…உண்மையா…

Rajini with K.V.Anand

காணொளி:-

கே வி ஆனந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க சம்மதித்திருப்பதாகவும், இதற்காக ஆனந்தை அவர் இருமுறை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனை செய்துள்ளதாகவும் செய்திக ஒன்று அடிபட தொடங்கியுள்ளது.

கோச்சடையான் படம் முடிந்ததும் ரஜினி அடுத்து நடிக்கவிருப்பது ராணாதான் என மீண்டும் மீண்டும் பலரும் சொல்லிக் கொண்டிருக்க, கடந்த சில தினங்களாக இந்த புதிய செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.

கோச்சடையான் திரைப்படம் முடியும் வரை எதையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் கே.வி.ஆனந்திடம் கேட்டு கொண்டதாகவும், ஆனால் தகவல் அறிந்த சிலர் விஷயத்தை கசியவிட்டதால், மீடியாவில் இந்த விஷயம் பரபரப்பாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். கே.வி.ஆனந்தும் அவரது விருப்பமான எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து ரஜினிக்கென ஒரு அதிரடி கதையை தயார் செய்து வருகிறார்களாம். இதில் ரஜினியின் பங்கும் இருப்பதாக தெரிய வருகிறது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம், ரஜினி – கே.வி.ஆனந்த் இணையபோவதை கேள்விப்பட்ட உடன் இந்த படத்தை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இந்தப் படத்தை தனது பேனரில் தயாரிக்க வேண்டும் என்று கே.வி ஆனந்தை கேட்டு வருகிறாராம்.

ரஜினி படம் என்றாலே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக எதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கும்….இந்த செய்தியும் எந்த அளவிற்கு உறுதி என்பது போக போக தான் தெரியும்.

ஆனால் கே.வி ஆனந்த் ரஜினி இணைந்தால் அது நிச்சயம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.