சோதிடம்,முதன்மை செய்திகள் எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்

எப்படி நம்ம யோகம்…குருபெயர்ச்சி பலன் 2012 – ரிஷபம்

Guru peyarchi Rishabam

காணொளி:-

பிற ராசிகளுக்கு
1. குருபெயர்ச்சி பலன் 2012 – மேஷம்
2. குருபெயர்ச்சி பலன் 2012 – மிதுனம்
3. குருபெயர்ச்சி பலன் 2012 – கடகம்
4. குருபெயர்ச்சி பலன் 2012 – சிம்மம்
5. குருபெயர்ச்சி பலன் 2012 – கன்னி
6. குருபெயர்ச்சி பலன் 2012 – துலாம்
7. குருபெயர்ச்சி பலன் 2012 – விருச்சிகம்
8. குருபெயர்ச்சி பலன் 2012 – தனுசு
9. குருபெயர்ச்சி பலன் 2012 – மகரம்
10. குருபெயர்ச்சி பலன் 2012 – கும்பம்


பேரன்புள்ள ரிஷப ராசி அன்பர்களே! வணக்கம்!! வாழி நலம்!!!

நவக்கிரகங்களில் களத்திரக்காரனும், நல்ல கிரகம், அள்ளிக் கொடுக்கும் வல்லமை பெற்றவன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சுக்ர பகவானை ஆட்சி கிரகமாகவும், வீடாகவும் ராசியாதிபதியாகவும் அமையப்பெற்ற ஸ்ரீ குரு பகவான் உங்கள் ராசிக்கு8,11 க்குடைய ஆயுள்ஸ்தானாதிபதியும்,தர்மகர்மாதிபதியுமான ஸ்ரீகுருபகவான் இதுவரையில் சுத்த திருக் கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமும் விரய ஸ்தானதிபதியுமானமேஷராசியில்இதுவரையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இவர் ஸ்வஸ்;திஸ்ரீ ஸ்ரீநந்தன நாம ஆண்டு வைகாசி மாதம் ; 4ஆம்தேதி ஆங்கிலம் மேமாதம் 17ஆம் தேதி 2012 ஆம்ஆண்டு (17-5-2012) வியாழக்கிழமை அன்று மாலை 6-18 மணியளவில் பெயர்ச்சியாகி ராசிமாறி உங்கள் ராசிக்கு முதல் ராசியும், ஜென்மராசியுமான ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து 27-5-2013 ஆண்டு வரை ஒராண்டு காலம் அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

குணநலன்கள்

உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால், இனிமையாகப் பேசி எல்லாக் காரியங்களையும் முடித்துக் கொள்வீர்கள். தனிமை உங்களுக்கு பிடிக்காது. தன்னைச் சுற்றி நாலுபேர் எப்பொழுதும் இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். தலைமைப் பதவி உங்களுக்கு பொருந்தும்.எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்திற்கு அஞ்சி, நேர்பாதையில் செல்வீர்கள்.

எந்த வேலை செய்தாலும், அதில் ஊன்றி கவனித்துச் செய்வீர்கள். வேலை செய்யும் போது உங்கள் கவனத்தை திசை திருப்ப முடியாது. முதலாளியாகவே நீங்கள் இருந்தாலும், தொழிலாளிகளோடு இணைந்து செயல்படுவீர்கள். அனுபவத்தில் பெற்றதை அடுத்தவர்களுக்கு எடுத்துரைப்பதிலும் நீங்கள் தான் வல்லவர்கள்.சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கவனத்தை திருப்பும் வகையில் உங்களது நடை, உடை, பாவனைகளை வளர்த்து வந்திருப்பீர்கள், 32 வயதுக்கு பிறகு தான், பிறர் பொறாமைப்படும் அளவுக்கு அதி வேகமாக வளர்ச்சி பெற முடியும் என்ற ராசியில் பிறந்தவரே!எந்த நேரத்திலும் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் நீங்கள். களத்தில் இறங்குவதற்கு முன்னால், யோசித்து இறங்குவதால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறது. மாற்றுக் கருத்துடையோரின் மனதில் இடம் பிடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. மனம் தளராமல் செயல்படுவீர்கள். பொது வாழ்வில் அதிக அக்கறை காட்டி புகழ் குவிப்பீர்கள்.

நந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசி உங்கள் ராசியாகும். அந்த நந்தி சிவனுக்கு முந்தி இருப்பதை ஆலயங்களில் பார்த்திருப்பீர்கள். அதைப்போல, எந்தச் செயலிலும் நீங்கள் முந்தி இருப்பீர்கள். கலைத்துறையில் பிரகாசிப்பவர்களும் நீங்கள்தான்.

பொதுப்பலன்கள்

ஜென்மகுரு வரும்போது தேகநலன் பாதிக்கும் மனநிம்மதி கெட்டிடும்
குருவின் அருள்பார்வை அதிர்ஷ்டம் கூடி சந்தோஷம் அதிகரிக்கும்
ஆறாமிடச்சனியால் வாழ்க்கை பொற்காலமாக அமையும்
ராகு-கேதுக்கள் தொட்டத்தெல்லாம் பொன்னாகும்அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும்

இதுவரை விரய ஸ்தானமெனும் பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த ஸ்ரீகுரு பகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி இப்போது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எந்த ராசிக்காரர்களுக்கும் அளவுக்கு மீறிய கெடு பலன்களைத் தராத ஸ்ரீகுரு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் இருக்கும் போது எதுவும் செய்ய நினைக்கமாட்டார். அதாவது கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் நற்பலன்களும் நடக்காது என்று தான் சொல்லவேண்டும் எனவே ஜென்ம குருவைப் பற்றி எந்த ராசிக்காரர்களும் கவலைப்பட வேண்டியதில்லை ரிஷப ராசிக்காரர்கள் துளிக்கூட கவலைப்பட வேண்டாம்.நீங்கள் மறுபடியும் எழுந்து நிற்பீர்;கள். பெரிய அதிர்ஷ்ட திருப்பமொன்று உங்களை நோக்கி வெகு வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இதைத் தர போகிறவர் யார் தெரியுமா? சாட்சாத் ஆறாமிட சனி உங்களை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லப்போகிறார். அதிர்ஷ்ட ல~;மியின் அரவணைப்பில் உங்கள் கனவெல்லாம் நினைவாகி லட்சியமெல்லாம் ஈடேறப் போகிறது என்பது நிஜம்.

ஸ்ரீகுருபகவான் மே மாதம் 17-ஆம் தேதியிலிருந்து ஜென்ம ராசிக்கு வருகிறார்.அதுவும் மோசமான நிலைதான்.ஆனால் சில நல்லதிருப்பங்கள் ஏற்படு வதற்கு இடமுண்டு.ஜெனன ஜாதகத்தின் அடிப்படையில் இப்போது பலம் இருக்கு மானால் இந்த ஆண்டின் முன்பகுதி குரு சஞ்சாரத்தினாலும் ஆறாமிடச்சனியின் சஞ்சாரத் ;தாலும்,நல்ல திருப்பங்கள் ஒன்றிரண்டைத்தரக்கூடும் என்பதில்சந்தேகத்திற்கு இட மில்லை.குறிப்பாகஅடுத்த சனிப்பெயர்ச்சி வரையிலும் விசேடமானஅனுகூலங்கள் ஏற்படும்.

ஸ்ரீ சனி பகவானின் சஞ்சார நிலவரம்

முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைமைகளை அனுசரித்துப் பார்க்கையில் உங்கள் ராசிக்கு 9,10ஆகிய இடங்களுக்குரிய அதிபதியும், ஜீவனஸ்தானாதிபதியும் கர்மாதிபதி யுமான ஸ்ரீP சனிபகவான் தனக்கே மிகவும் உகந்த உயர்ந்த ஆறாமிடமான துலாம்ராசியில் அற்புதமாக அருமையாக அதிர்ஷ்டகரமாக அட்டகாசமாக தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு பெரும் யோக காலமாகும். எதைத் தொட்டாலும் வெற்றி தான். தனிக்காட்டு ராஜாவாக, ஒரு சாதனையாளராக, உங்கள் வாழ்க்கை பொற்காலமாக அமையும். பிரமிக்கத்தக்க விபரீத ராஜயோக மாற்றத்தை ஏற்படுத்தி தரப்போகிறார்.

ஸ்ரீ சனிபகவானின்; ஆறாமிடத்து சஞ்சாரத்தைப் பற்றி எல்லா சோதிட நூல்களும் புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம். அவைகளில் சிலவற்றை இங்கே பாருங்களேன்.

அறையவே சனியவனும் மூன்றாறோடு ஆனபதினொன்றினிலேஅமர்ந்திருக்க
நிறையவே பாக்கியமும் கீர்த்தி செல்வமும்நீடுவாகனம்இடம் பொருளும் ஏவல்
உறையவே லட்சுமி கடாட்சம் உண்டாம் உறுதியாய்எடுத்தகாரியங்கள்ஆகும்
மறையவேவெற்றி தண்டிகையினோடுமகிழ்ச்சியாம் குதிரைஉண்டாம் என்னே!

பண வசதி, பேர், புகழ், பெருமை, சுபீட்சம், சாதனை எல்லாம் இனிமேல் உண்டு என்பதைக் கேட்கவே சந்தோஷமாகவே இருக்கிறதல்லவா? சனி ஆறில் வருவதற்கு சர்வ சௌக்யம் என்று எல்லோருக்கும் எவ்விதத்திலும் நன்மை சுகம் என்று ரத்ன சுருக்கமாக பல தீபிகைகாரர் இரண்டே வார்த்தைகளில் பலன் சொல்லிவிட்டார்.

சனியவன் மூன்றில் ஆறில் தயவு பன்னொன்றில் ஒன்பான்
இனி வரும் காலம் நன்றாம் எடுத்ததோர் முயற்சி வெற்றி
தனிபெரும் யோகமாகும் தண்டிகை குதிரை உண்டு
கனிவரும் மொழியா ரோடு கலந்திடும் காமனாமே

என்ற ஜோதிட களஞ்சிய பாடல்படி சனி ஜென்மத்திற்கு ஆறில் வரும் போது சனி ஆறில் உள்ள வரை காலம் நன்றாக இருக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். ராஜயோகம் சித்திக்கும் (எம்.எல்.ஏ எம்.பி, மந்திரி)மறு;றும் அவரவர் தகுதிக்கேற்ப பஞ்சாயத்துப் போன்ற அரசியல் பதவிகள் வாய்த்தல் பல வித வாகன யோகம் (கார், ஸ்கூட்டர் வாங்கல்) சிலருக்கு தாழ்ந்த இனப்பெண்யோகம், விதவை யோகம், களத்திரஸ்தானம் நன்கமைந்தவர்க்கு கல்யாணம், தன் மனைவி மூலம் அதிக சுகம், தடைப்பட்ட திருமணம் கூடல் போன்ற நல்ல பலனாகவே நடக்கும் என்றாகிறது.

எனவே ஆறாமிடத்துச்சனியால் இனி அதிர்ஷ்டகரமான ராஜ யோக நன்மையான பலன்களே அதிகரித்திடும் என்பது மட்டும் நிஜம்.

ஸ்ரீராகு-கேது பகவான்களின் சஞ்சார நிலவரம்

மேலும் முக்கிய கிரகங்களான நிழல் கிரகங்கள் யோககாரகனான ஸ்ரீராகுபகவான் தொடர்ந்து உங்கள்ராசிக்கு ஏழாமிடமான விருச்சிகத்திலும்,யோகக்காரகனான ஸ்ரீகேது பகவான் ஜென்மத்திலும் தொடர்ந்து சஞ்சரிக்கிறார்கள். இக்காலங்களில் நீங்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதிக சிரத்தை தேவை ஏழாமிட ராகு விவகாரமான வில்லங்கமானவர். பண நெருக்கடி, குடும்பத்தில் குழப்பம், குதர்க்க வாதம், வாக்கு, நாணயம், நேர்மை தவறுகிற மாதிரி ஒரு சூழலை உண்டு பண்ணலாம்.

வாக்கிய பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான ஸ்ரீ ராகு பகவானும், ஸ்ரீ கேது பகவானும் கார்த்திகை மாதம் 17ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி 2012ஆம்ஆண்டு (2-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10-53 மணியளவில் பெயர்ச்சியாகி முறையே ஸ்ரீ ராகு பகவான் ராசிமாறி துலாம் ராசிக்கும், ஸ்ரீ கேது பகவான் பெயர்ச்சியாகி ராசி மாறி மேஷ ராசிக்கும் 11-31 நாழிகைக்குள் பிரவேசித்து ஒன்னறை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் சுத்த திருக்கணித பஞ்சாங்க சித்தாந்தப்படி நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும் மார்கழி மாதம் 8ஆம் தேதி ஆங்கிலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு (23-12-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராகு பகவானும், அதே நேரம் ஸ்ரீகேதுபகவானும் பெயர்ச்சியாகி ராசி மாறி முறையே துலாம்ராசிக்கும்,மேஷராசிக்கும்பிரவேசித்து ஒன்னரைஆண்டுகாலம்சஞ்சாரம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இருபஞ்சாங்கங்களின் சித்தாந்தப்படி உங்க ராசிக்கு 6மிடத்தில் ஸ்ரீராகுபகவான் சஞ்சாரம் 12-மிடத்தில் ஸ்ரீகேது பகவான் சஞ்சாரம் இந்த இரண்டு இடங்களுமே அசுபஸ்தானங்கள் தான். இதிலே அசுபர்களான ராகுகேதுக்கள் இருப்பது அனுகூலமே.குறிப்பாக 6மிட ராகு ஒரு தைரியத்தையும் எதிரி களிடம் வெற்றிபெறும் அமைப்பையும் சாதிக்கக்கூடிய ஆற்றலையும் அமைத்துத் தருவார். அதன் விளைவாக நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும் என்றே சொல்ல வேண்டும்.காரணம் ராகு இருக்கும் இடம் வரவை அதிகரிக்கும் இடம். கேது இருக்கும் இடம் விரயத்தை அதிகரிக்கும் இடம். இருப்பினும் 6-ம் இடத்தில் ராகு சஞ்சரித்து அஷ்டலட்சுமி யோகத்தை உங்களுக்கு வரவழைத்துக் கொடுப்பார்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சார நிலவரம்

இதுவரை விரயஸ்தானமும் பன்னிரெண்டாமிடமுமான மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸ்ரீகுருபகவான் இப்போது உங்கள் முதல் ராசியும் ஜென்ம ராசியுமான ரிஷப ராசிக்கே ராசி மாறி வந்திருக்கிறார். இதைத்தான் ஜென்ம குருகாலம் என்று கூறுவார்கள். இதனால் விரயம் மாறுமா? வாழ்வு உயருமா? தாழ்த்துமா, சந்தோஷக் கடலில் மிதக்க விடுமா? என்ற எண்ணங்கள் நெஞ்சில் அலைகளாய் மோதிக் கொண்டிருக்கின்றன. ஜென்ம ராசி என்பது ஸ்ரீகுருபகவானுக்கு உகந்த இடமா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.ஜென்மத்தில்குரு வருங்கால சிக்கல் சிரமம் சோதனை வேதனை வந்து விலகி விடும். இந்த குரு மாறுதல் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப் பதைவிட இதுவரையில் நீங்கள் பட்டுக் கொண்டிருக்கின்ற பாடுகளை விடவா இனிமேல் பார்த்துவிட போகிறீர்கள். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வாழ்க்கையையே சாதுர்யமா, சாமர்த்தியமா சமாளித்துக் கொண்டு வந்திருந்த நீங்கள் இனிமேல்தானா தாக்குப் பிடிக்காமல் போய்விடப் போகிறீர்கள். ஆனால் பொதுவாக ஜென்ம குரு பற்றி ரொம்பவும் சொல்வதற்கில்லை ஜென்ம குரு ஒரு வகையில் பிற்போக்கினை ஏற்படுத்தக் கூடியது தான் என்றாலும் ஓரளவு நன்மைகளையேயும் கூட அளித்திடும் என்பது பொது விதி.

ஜோதிட சாஸ்திரங்களும் – ஜோதிடச் சுவடிகளும்

பொதுவாக ஜோதிட சாஸ்திரங்கள் எல்லாமே ஜென்ம ராசியில் ஸ்ரீகுருபகவான் சஞ்சரிப்பதை பற்றி என்ன கூறுகிறது –

சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து
வல்லவே பன்னிரெண்டில்இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டுர வாதம்
புல்லவேசகோதரர்தாய் மனையாள் புத்திரரின் நலம் கெடும், பொருளும் போகும்
அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே

-என்று ஜாதக சித்தியும் நல்லவிதமாக சொல்லவில்லையே. கவலையோடும், கலக்கத்தோடும் தான் கூறுகிறது.

ஜென்ம ராமர் வனத்திலே…… சீதையை சிறை வைத்ததும்

என்று பயமுறுத்தும் பாடலைக்கண்டு அப்படியொன்றும் பயப்பட தேவையில்லை. ஜென்மராசியில் குரு சஞ்சரிக்கும் போதுதான் ராமர் வனவாசம் போனாராம். ஆனால் இப்போது எந்த காடு இருக்கிறது வனவாசம் செல்வதற்கு. வீட்டில் இருந்தாலும் சுகசௌகர்யமும் நிம்மதியும் குறைந்தது-சுகமான வசதி வாய்ப்பு அனுபவிப்பதற்கு இக்கட்டு, இடைஞ்சல், குறுக்கீடு நிறைந்த வனவாசத்தை போன்று துன்பமும், துயரமும் மனத்திலே சஞ்சலமும், சங்கடமும் அனுபவிக்க நேரிடும் என்பதுதான் இதன் பொருள்.

இதையே புலிப்பாணி முனிவர் அலங்காரமாகச் சொல்வதைப் பார்ப்போம்.

பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு பரமகுரு ஜென்மத்தில் வந்தபோது
கூரப்பா கோதண்டபாணி வீரன் கொற்றவனே குடியேறிப் போகச் செய்தார்
சீறப்பா சென்மனுக்கு வேதை மெத்த சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்
வீரப்பா வேந்தனும் தோஷமுண்டு விளம்பினேன் கோசார வினையைக்கேளே?

ஜென்ம ராசியில் ஸ்ரீகுருபகவான் வந்த போதுதான் கோதண்டம் என்னும் வில்லையுடைய ஸ்ரீPராமபிரான்,தசரத சக்கரவர்த்தியாலேயே நாட்டை விட்டுக்காட்டுக்குள் குடியேறினான். ஆகவே ஜென்மராசியில் குரு உள்ளவனுக்கும் சோதனைகளும், வேதனைகளும் துன்பங்களும்,துயரங்களும் தொடரும்.பொன், பொருள்கள் நஷ்டமாகும்.அரசாங்க வகையில் நஷ்டமும் கஷ்டமும் அல்லலும் அவதியும் மெத்த உண்டு என்பது இப்பாடலின் கருத்து.

மோகார்த்த நாச ஸ்திதிமான பங்கக்ராமாத்வருக் ஜாதி விரோத வைரான்- என்பது யவனாச்சாரியாரின் வாக்கு.விரும்பிய பணமும் பொருளும் அழியும் நிலையில் மாற்றம் ஏற்படும். கௌரவக் குறைவு உண்டாகும். ஊரிலும், உறவினர் களிடத்திலும் பகை ஏற்படும் என்று யவனர், கெட்ட பலன்களையே கூறி இருக்கிறார்.

ஓங்கவே குருவே தான் ஒன்று மூன்று உகந்த நாலாறெட்டுப் பத்தீராறில்
தீங்காத நின்றிடிலோ பலனைக் கேளு தேடிய பொருள் பூமி சேதமாகும்
வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாதபித்த ரோகமது வந்து வாட்டும்
தாங்கவே தந்தையோடு புத்திரர்க்கும் தேடி வரும் தீமையது இடர் உண்டாமே

-என்று கோட்சார சிந்தாமணிப் பாடலும், ஸ்ரீகுருபகவானின் ஜென்மராசியின் சஞ்சாரத்தைப் பற்றி குறைதான் கூறுகிறது.

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் போது நீங்கள் தெம்பாகத் தெளிவாக, ஆரோக்கி யமாக உற்சாகமாக இருப்பீர்கள் என்று சொல்வதற்கில்லை. வாதபித்த ரோகமது வந்து வாட்டும் என்றவார்த்தையிலிருந்து நோய்நொடிகள் ஏதேனும் உங்களை பாதித்திட செய்யும் என்றுதான் புலப்படுகிறது.எனவே உடல் நலத்தைப்பற்றி அக்கறையும் கவனமும் பீதியும் பயமும் மனக்கவலையும் கலக்கமும் எண்ணமும் மனத்தில் இருந்திட ஞாயமுண்டு.

ஜீவோ ஜன்ம பயகத தனதீ ஸ்தானப் பிரஷ்டோ பஹகலஹயுத

-என்று ஜென்ம குருவைப் பற்றி வராகமிஹிரர் கூறுகிறார்.

ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது வாழ்க்கையில், செய்தொழில், வியாபாரம் வகையில் அச்சமும், பணக் கஷ்டமும், இடம் விட்டு இடம்மாறுவதாலும் கஷ்ட நஷ்டங்க ளும் கவலையும் கலக்கமும், சஞ்சலமும், சங்கடமும் ஏற்படும் என்று பொருள். ஜென்ம குரு என்றாலே சிக்கல்,சிரமம்,பிக்கல், பிடுங்கல் என்றுதான் எந்த சுவடியும் சொல்லும்..

பொன்னவன் மூன்று நாலில் பொருந்து பத்தாறில் எட்டில்
உன்னிய பன்னிரெண்டில் ஒரு ஜென்மம் தன்னில் நின்றால்
மன்னரால் பதியும் சேதம் மாதரால் வியாதி மந்தம்,
நன்னிய தலைமயக்கம் நவிலு வாய்ப் புண்ணுண்டாமே

– என்று ஜாதகாலங்காரம் சொல்லுவது போல தலைசுற்றல், வாய்ப்புண், தீயபழக்க வழக்கம், ரத்தம் கெடுதல், தோல்வியாதி போன்றவை ஆரோக்கிய குறைவும் ஏற்படும்.

இனி நீங்கள் முயற்சிக்கும் காரியங்களில் புத்திசாலித்தனத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. எதையும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் சமாளிக்கக்கூடிய மனவலிமை யோடு ஆற்றலும் சக்தியும் அதிகரிக்கும். எங்கும் எதிலும் துணிச்சலையும்,யோசனைகளில் அறிவுக் கூர்மையைக்காட்டுவீர்கள். இழுபறியான ஊசலாட்டமான எண்ணங்களையும் ஒதுக்கி உருப்படியான ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்தனை செலுத்துவீர்கள்.

ஸ்ரீ குருபகவான் ஜென்மராசியிலே சஞ்சரிக்கும் போது பொருளாதார நிலையில் உயர்த்தி பணவசதியும் சுபீட்சமும் அதிகரிக்கச் செய்யாவிட்டாலும் அலைக் கழிப்புகளையும், நெருக்கடி,கெடுபிடி,பற்றாக்குறைகளையும் கட்டுப்படுத்துவார். ஆனால் ஜென்ம குருவாக இருந்தாலும் பாக்யாதிபதியான குரு பணவசதியை முன்னைவிட அதிகப்படுத்துவார்

செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம் வகையில் உங்களை நிம்மதியாக இருக்க விடாமல் அமைதியைக் கெடுத்திடும் வகையில் குழப்பமான, குளறுபடியான குறும்புத்தனமான செயல்களை அதிகரித்திட செய்யும். பொறுப்புகளில் போதுமான அளவுக்கு அக்கறையும், ஆர்வமும் ஈடுபாடும் முயற்சி செய்யவிடாமல் தடுத்திடும்.

ஜென்ம குருவினால் குடும்பத்தில் சில சோதனைகளும், வேதனைகளும், சுபீட்சமும், சுகசௌகர்யங்களும், தெம்பும், உற்சாகமும் குறைந்து மனஅமைதியும் நிம்மதியும் கெட்டிடும் வகையில் பிரச்னைகளும்,குழப்பங்களும்,குளறுபடிகளும் நிலவினாலும் அவரது பொன்னொளி பார்வையினால் நன்மையான பலன்கள் உண்டாகிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு – வேலைச்சுமை கடுமையாகவே இருக்கும். உங்களை சூழ்ந்திருந்த பல பிற்போக்கான பிரச்னைகளெல்லாம் படிப்படியாக குறையும்

மாணவர்களுக்கு – இதுவே அருமையான திருப்பம் என்பதால் படிப்பில் கட்டாயம் அபிவிருத்தி உண்டு. சாதனையும் விருதும் உண்டு.

வியாபாரிகளுக்கு – பண சம்பந்தமாக இருந்த கடுமையான கஷ்டங்கள் விலகிவிடும். புதிய முயற்சியில் இறங்குவதோ, அகலக் கால் வைப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது.

தொழிலாளர்களுக்கு – உங்கள் உழைப்பு எப்போதும் பக்கபலமாக இருக்கும். சிலர் சுயமுயற்சியால் சொந்ததொழில் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு – திறமையும், உழைப்பு., ஆற்றலும் வெளிப்படும். புத்தியிலும், கற்பனையிலும், சிந்தனையிலும் இருந்து ஜொலிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு – கடின உழைப்பால் புகழ் பெறுவீர்கள். பதவி பெற பணம் செலவழிக்காதீர்கள்.

பெண்களுக்கு – மனத்தில் மலர்ச்சியும், உள்ளத்தில் குளிர்ச்சியும் வசதியும், வளர்ச்சியும் குடும்பத்தில் செழிப்பும், சுபீட்சமும் அதிகரித்திடும்.

ஸ்ரீகுருபகவானின் அருட்பார்வைகளினால் ஏற்படும் நன்மைகள்

ஜென்ம குருவின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமான கன்னியில் வீசுவதால், ஜென்ம குருவே தன் அருள் பார்வையினால் சமயோசிதமான யுக்தி, புத்தி, யோசனைகளை கொடுத்து எங்கும், எதிலும் நிற்க வைத்து விடும். தட்டுத் ;தடங்கல்களையும் சமாளித்து கூடுமான வரை நன்மைகள் உண்டாக்கிடுதலு முண்டாம். முயற்சிக்கும் காரியங்களில் புதிய திட்டங்களையும் தீர்மானங்களையும் வகுத்துக் கொண்டு முன்னேறுவதற்கான அனுகூலமும் ஆதாயமும் கிட்டிடும்.

அடுத்ததாக, குருவின் இன்னொரு பார்வையான ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாமிடமான விருச்சிகத்தில் பதிகிறது.அது களத்திரஸ்தானமாகும். திருமணம், சுபகாரியங் களுக்கோ, தடைதாமதத்திற்கோ, சுற்றலோ சுணக்கத்திற்கோ இருந்து வந்த முட்டுக் கட்டை கள் விலக ஆரம்பிக்கும். திருமண யோகத்திற்கான சாதகமான சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். உற்சாகமும் ஏற்படுதலுமுண்டாம்.

ஸ்ரீகுருபகவானின் மற்றொரு பார்வையான ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான மகரத்தில் வீசும்போது சரளமாகவும், தாராளமாகவும், பெருந்தொகை யாகவும், பணம் புரட்டிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கும். சில சமயங்களில் தேவைக்கதிகமாக உபரியாக கைக்கு கிடைத்திடவும் ஞாயமுண்டு.

நட்சத்திரப் பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

பிதுர்காரகன் என்று வர்ணிக்கப்படும் சூரியன் ஆதிக்கம் பெற்ற கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் சிறிது மந்தமாகத் ;தான் இருக்கும். எதையும் அதன் போக்கில விட்டுப் பிடிப்பது நல்லது. செய் தொழில் வியாபாரத்தில் எந்த மாறுதலையும் செய்ய வேண்டாம். திடீர் அதிர்ஷ்டத் திருப்பம் ஏற்படும். புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் வீணாகக் குழம்ப வேண்டாம்.

ரோகிணியில் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

மாதாகாரகன் என்று வர்ணிக்கப்படும் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் சிறிது ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். எதையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசிப்பது நல்லது. செய்தொழில் வியாபாரத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். லாபங்கள் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் வழக்கமான அமைதி நீடிக்கும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இழந்தைவை திரும்பக் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

யோகக்கார நட்சத்திரமான தைரியக்காரகன் என்று வர்ணிக்கப்படும் செவ்வாயின்; பலம் பெற்ற மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் குழப்பங்கள் சிறிது சிறிதாகக் குறையும். நம்பிக்கை ஒளி பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் வெளியே தெரியாது. உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகள் இன்னும் மிச்சமிருக்கின்றது.தெய்வ அருளால் அற்புதமொன்று நடக்கும். நன்மைகள் நிறையவே நடக்கும். விட்டதை பிடித்து விடலாம். எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் காத்திருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும்.

மாதவாரியாகப்பலன்கள்

மே-17-5-2012 முதல் 31-5-2012 வரை – இக்காலக்கட்டம் மாபெரும் ஒரு வரப்பிரசாத மாகும். இதர கிரகங்களும் சாதகமாகவே உள்ளபடியால் அரசாங்க அனுகூலம் ஹேஷ்ய பூர்வமான விஷயங்களில் லாபம் – முயலும் காரியங்களில் அபார வெற்றி பெருத்த லாபமும் கிட்டும். அன்னிய பெண்களாலும் நன்மை உண்டு. செய்தொழில், வியாபாரம், வணிகம், உத்தியோகம், சம்பந்தப்பட்ட வகைகளில் நல்ல பலன்கள் அதிகரித்திடும்.

ஜூன்-1-6-2012 முதல் 30-6-2012 வரை – இந்தக் காலக்கட்டம் எல்லாவகையிலும் இனி ஏறுமுகம் தான்.மீண்டும் உங்களை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். புதிய முயற்சிக ளில் ஈடுபட்டு வெற்றிநடைபோடுவீர்கள். செய்தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும், லாபகரமான வருமானபெருக்கத்தில் அபிவிருத்தியும் எதிர்பார்த்த வருமானங்கள் வரும்.

ஜூலை – 1-7-2012 முதல் 31-7-2012 வரை – இக்காலக் கட்டங்களில் மாத கிரகங்கள் அனுகூலமான நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாலும் ஆதாயம் தரக்கூடிய நற்பலன்களே எனலாம். எதுவும் வெற்றியாகும். நினைத்தபடி-சொன்னபடி-திட்டமிட்ட படியாகவும் ஈடேறும். வாக்கு சாதுர்யம் வெற்றி தரும். ஆனால் செய்தொழில், வியாபாரத்தில் எந்த மாறுதலையும் செய்யக்கூடாது.

ஆகஸ்ட்-1-8-2012 முதல் 31-8-2012 வரை – இக்காலகட்டம் முயற்சிக்கும் காரியங்களில் வேகமும் விறுவிறுப்பும் மும்முரமாகி சாதனை புரிவீர்கள். முகத்தில் மலர்ச்சியும், உள்ளத்தில் குளிர்ச்சியும் நிறைந்து தைரியமும், தன்னம்பிக்கையுடன் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். வருமானம் உபரியாகவே புரளும். வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட் விவகாரங்களில் அருமையான திருப்பம் உண்டாகிடவும் கூடும்.

செப்டம்பர்-1-9-2012 முதல் 30-9-2012 வரை – இந்தக்காலகட்டம் முயற்சிக்கும் காரியங்களில் சீராகவே இருந்து வரும். எதிர்பார்த்த மேன்மையான பணிகள் சுணக்க மின்றி நடைபெறும். செய்தொழில், வியாபாரத்தில் ஒரு அதிர்ஷ்டகரமான திருப்பம் ஏற்பட்டு விடும். பாக்கிகள் வசூலாகும்.கொடுக்கல்,வாங்கலில் சீரானபோக்கே நிலவும்.

அக்டோபர் -1-10-2012 முதல் 31-10-2012 வரை – இக்கால கட்டம் சிறப்பானதே. உடல்நலம் -மனநலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாளைய திட்டங்கள் வெற்றி தரும். செய்தொழில் துறையில் சரளமான முன்னேற்றம், அரசாங்கச் சலுகைகள்-புதிய வீடு, மனை வாங்கவும் கூடும். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகவும் எப்போதும் சிந்தனைவயப்பட்ட நிலையில் இருப்பீர்கள்.

நவம்பர் 1-11-2012 முதல் 30-11-2012 வரை – இந்தக்காலக்கட்டம் முயற்சிக்கும் காரியங்களில் வெற்றியும், பெரிய நன்மையும் கிட்டிடும். செய்தொழில், வியாபாரம் வகையில் அபிவிருத்தியும் கணிசமான லாபகரமான வருமானப் பெருக்கமும்,அதிகரித்திடும். உத்தி யோகஸ்தர்களுக்கு அனுகூலங்களும் ஆதாயங்களும் ஏற்படும். குடும்ப சுபகாரியங் களை முன்னிட்டு உறவினர் உங்களைத் தேடிவருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம்.

டிசம்பர் -1-12-2012 முதல் 31-12-2012 வரை – இந்தக்காலக் கட்டங்களில் எல்லாமே மந்தமாகத்தான் இருக்கும். எதையும் யோசிக்காது செய்வது நல்லதல்ல. செய்தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள்,கெடுபிடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாறுதல் இருக்கும். முயற்சிக்கும் எந்த ஒரு காரியமும் பல முறை யோசித்து முயற்சித்தால் ஓரளவு சாதிக்க முடியும். மனைவி நலனில் கூடுதல் கவனம் தேவை.

ஜனவரி -1-1-2013 முதல் 31-1-2013 வரை – இக்காலகட்டத்தில் பிரச்னைகள் நிரம்பியதாகவே இருக்கும் என்றாலும் சாதுர்யமாக சாமர்த்தியமாக சமாளித்து விடலாம். செய்தொழில், வியா பாரத்தில் மந்தநிலை நீடிக்கும். புதிய கடன் படவும் கூடும். வீடு, நிலம், மனை போன்ற ஸ்திர சொத்துக்கள் வகையில் குழப்பமும், குளறுபடிஉடன் பிறந்தவர்களாலும் மனக்கசப்பும் உண்டாகும்.

பிப்ரவரி -1-2-2013முதல் 28-2-2013 வரை – இக்காலகட்டத்தில் எல்லா வகையிலும் மந்தமாகத்தான் இருக்கும். எங்கும் எதிலும் யோசனை செய்து இறங்குவதும் வீண் வம்பு,வழக்கு,வியாஜ்ஜியம்,கோர்ட் விவகாரங்களில் சிக்காமல் இருப்பதும்நல்லது. செய் தொழில், வியாபாரத்தில் எந்தவிதமான மாறுதலும் கூடாது.இருப்பதை விட்டு விட்டு வீணாக பறப்பதை பிடிக்க முயற்சிக்காதீர்கள்.

மார்ச்-1-3-2013 முதல் 31-3-2013வரை – இந்தக் காலக்கட்டம் எந்த மாற்றத் ;தையும் ஏற்படுத்தாது. மாறாக சிறிய ஏமாற்றங்களை ஏற்படுத்தும். முயற்சிக்கும் காரியங்கள் சாதகமாக இருக்காது.எதை ஆரம்பித்தாலும் தட்டுத்தடங்கல்,தடை, தாமதம், முடக்கம், முட்டுக்கட்டை சோதனையும், வேதனையும் என்ற தொல்லைகள் கலந்தே இருக்கும்.;

ஏப்ரல் 1-4-2013 முதல் 30-4-2013 வரை – இந்தக் காலக்கட்டம் ஏற்றமாற்றமின்றி இருக்கும். ஓரிரு அதிர்ஷ்டவாய்ப்புகளும் கிட்டும்.மனதுக்கு சிறிது ஆறுதலாகவும், செயலில் கொஞ்சம் மாறுதலாகவும் இருக்கும். திட்டமிட்ட பணிகள் தீவிர முயற்சியின் பேரில், கடும் உழைப்பின் பேரிலும் நடக்கும். செய்தொழில், வியாபாரத்தில் மந்தமும், தடையும் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். வருமானம் சீராக இருக்கும்.

மே 1-5-2013 முதல் மே 27-5-2013 வரை – இனி அடிகளை அளந்து தான் வைக்க வேண்டும். அதிக ஆசைப்படக்கூடாது என்றாலும் சிறிது தெளிவுவாகவே இருக்கும். திடீரென்று பெருந்தொகையொன்று கைக்கு கிட்டிடும். செய்தொழில், வியாபாரத்தில் ஒரு மாறுதலான அதிர்ஷ்டத் திருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாறுதல்கள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

மொத்தத்தில்இந்தகுருப்பெயர்ச்சி உங்களுக்கு எந்தமாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தாது என்றாலும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்தாது.டென்ஷனுக்கு மத்தியில் வழக்கம்போல புயல் வேகத்தில் செயல்பாடுகளில் அசுரத்தனமாக வலம் வந்துக் கொண்டி ருப்பீர்கள். ஆனால் எதிர்பாராத அற்புதங்கள் மட்டும் நடக்கும் என்பதுதான் நிஜம்.

குரு வாழ்க! குருவே துணை!![rps]

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.