அரசியல்,முதன்மை செய்திகள் கோர்ட்டுக்கு டகால்டி காட்டும் ஜெயலலிதா

கோர்ட்டுக்கு டகால்டி காட்டும் ஜெயலலிதா

Cour Case in Bangalore,Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

நூறுக்கும் அதிகமான மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்து நீதி நிலைநாட்டப்படுவதை சீர்குலைக்க முயலுவதாக முதல்வர் ஜெயலலிதா மீதும் சசிகலாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், அசோகன், கந்தசாமி, செந்தில் ஆஜராகினர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, துணை வழக்கறிஞர் சந்தேஷ் சௌட்டா ஆகியோர் ஆஜராயினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி மல்லிககார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் ஆஜராகியிருந்தனர். இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அவர் மயக்கமடைந்துள்ளார். எனவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கமான பதில் அளிப்பதற்கு தங்கள் கட்சிக்காரருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஆவணங்களின் நகல்களை படிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மறுபளித்து பேசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், சொத்துக் குவிப்பு வழங்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதால் தங்கள் தரப்பில் உள்ளவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறிய பதில்கள் எதுவும் நினைவில் இல்லை. இதனால் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகமில்லை என்ற பதிலை தான் கூறவேண்டியுள்ளது. ஆவணங்களைப் பார்க்க நீதிமன்றம் அனுமதித்தால் எங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்களை காட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இது போன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இதை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, இவர்களுக்கு இதே வேலையாகி விட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வது, இங்கு தள்ளுபடியான பின், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவது என்பது இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இதுவரை வழக்கை இழுத்தடிக்க மட்டும் நூறு மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையாகும் இது, ஆகையால் சட்ட விதி 15(2)-ன் கீழ் ஜெயலலிதா, சசிகலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு இந்த நீதிமன்றம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா, ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கக் கோரிய ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் மீதான உத்தரவை ஏப்ரல் 21ம் தேதி (நாளை) தெரிவிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி