அரசியல்,முதன்மை செய்திகள் டக்ளசு, யாழ்பாணம் சூப்பர் அப்பு…

டக்ளசு, யாழ்பாணம் சூப்பர் அப்பு…

india-srilanka flag

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழு நேற்று யாழ்ப்பாணம் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை பார்வையிட்டது. இந்திய குழுவை அப்பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் ஏராளமான தமிழர்கள் சந்தித்து உரையாடினர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்ததனால் யாழ்ப்பாணத்திற்கு வந்கதகவும், போருக்குப் பிறகு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை பார்த்து பிரமித்துவிட்டதாகவும் மகிந்த ராஜாபக்சேக்கு சான்றளித்துள்ளார்

இந்தியா, ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததற்கு முக்கிய காரணம் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் என்று காங்கிரஸ் செய்யவேண்டிய சப்பை கட்டை இவர் செய்துள்ளார்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலின்படி யாழ்ப்பாணத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் உதவியோடு யாழ்ப்பாணத்தை மேலும் சீரமைப்பதே தனது சீரிய நோக்கம் என்று மகிந்த ராஜாபக்சேவுக்கு சாமரம் வீசியுள்ளார்.

இந்தியா மற்றும் கொலைவெறி இலங்கை சேர்ந்து தமிழர்களுக்காக நடத்தும் நாடகம் இனிதே தொடங்கியுள்ளது…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி