திரையுலகம் ரிச்சாவுக்கு ரிச்சா ஒரு கதை கிடைக்கவில்லை

ரிச்சாவுக்கு ரிச்சா ஒரு கதை கிடைக்கவில்லை

மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அதற்கு அடுத்து ஒஸ்தி படத்தில் நடித்தார். எடுத்த எடுப்பிலேயே தனுஷ், சிம்பு என்று டாப் ஹீரோக்களுடன் நடித்த ரிச்சா, அதற்கு அடுத்து தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோம். இதற்கான காரணம் குறித்து விளக்கியிருக்கிறார் ரிச்சா. அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம், ரசிகர்களை கவரும் வகையில் அமைய வேண்டும். அப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு பிறகு வித்தியாசமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதுவும் என்னுடைய அடுத்தபடம் நான் இதுவரை நடித்திராத ஒரு புதிய ரோலாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது வரை கிட்டத்தட்ட 8 படங்களுக்கு கதை கேட்டு விட்டேன். ஆனால் எனக்கு எதிலும் திருப்தியில்லை. சும்மா ஏனோ தானோ என்று நடிக்க விரும்பவில்லை. எனவே நல்ல ரோலுக்காக காத்திருக்கிறேன். மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ரிச்சா, பெங்காலி மொழியில் உருவாகும் பிக்ராம் சின்ஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் வெளிவந்த சிறுத்தை படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி