அரசியல்,முதன்மை செய்திகள் ராமஜெயத்தை போட்டது தூத்துக்குடி குரூப்பா…?

ராமஜெயத்தை போட்டது தூத்துக்குடி குரூப்பா…?

Ramajayam K.N. Nehru brother

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு குரூப்பினால் கொல்லப்பட்டதாக தற்போது போலீஸாரின் சந்தேகப் பார்வை இறுகி வருவதாக தெரிகிறது.

அரசியல் கொலையாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்ட ராமஜெயத்தின் கொலை கடைசியில் சாதாரண பெண் விவகாரத்தில் நடந்திருப்பதாக தற்போது சந்தேகம் வலுத்து வருகிறது.

ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகம் இடையில் எழுந்தது ஆனால் அதுவும் பின்னர் மறைந்து இப்பொழுது பெண் விவகாரத்தில் நடந்ததாக நம்பபடுகிறது.

ஏழு தனிப்படைகள் அமைத்தும் கூட இதுவரை ராமஜெயம் கொலை குறித்து உறுதியான தகவல், துப்பு எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ராமஜெயம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு காதல் ஜோடியைக் காத்ததோடு கல்யாணத்தையும் நடத்தி வைத்துள்ளார். மேலும் தனது பகுதியிலேயே குடியிருக்கவும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் காதல் மணம் புரிந்த தம்பதிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மறுபடியும் ராமஜெயத்தை நாடியுள்ளனர். இந்தப் பஞ்சாயத்தின் இறுதியில், அந்த நபர் சொந்த ஊருக்குப் போய் விட்டார். ஆனால் அவர் காதலித்து மணம் புரிந்த பெண் போகவில்லை. மாறாக அதே வீட்டிலேயே இருந்துள்ளார். ராமஜெயத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அவர் போய் விட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண்ணையும் தற்போது காணவில்லையாம். அவரைக் கண்டுபிடிக்கவும் போலீஸார் முயன்று வருகின்றனர்.

இவர்தான் குற்றவாளி என்று ஆணித்தரமாக சொல்லும் அளவுக்கு எந்த ஆதாரம் இதுவரை போலீசிடம் சிக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி