திரையுலகம் ரிச்சாவுடன் ஒரே அறையிலா…

ரிச்சாவுடன் ஒரே அறையிலா…

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பாய் பிரெண்ட் – காதலர் என்று சொல்லப்படும் சுந்தர். ரிச்சா தன் காதலர் சுந்தர் என்பவருடன் தங்க நட்சத்திர ஓட்டலில் ரூம் கேட்டதும். அதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டதால், வேறு ஓட்டலுக்கு போய் ஒன்றாகத் தங்கியதும் சமீபத்தில் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தியாக வந்தது.

யார் இந்த சுந்தர்?

இந்த சுந்தர் வேறு யாரும் அல்ல… மயக்கம் என்ன படத்தில் ரிச்சாவின் பாய் பிரெண்டாக வந்து, பின்னர் காதலியை தனுஷுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாரே… அவர்தான்.

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியது குறித்து அவரிடம் கேட்டபோது, “இந்த செய்தியில் அடிப்படை உண்மையே அல்ல. நானும் ரிச்சாவும் நெருக்கமான நண்பர்கள். மயக்கம் என்ன படத்தில் நடித்ததிலிருந்து எங்களுக்குள் நட்பு உள்ளது. அவரை வைத்து நான் எடுத்த போட்டோ ஷூட் படங்களைக் கொடுக்க ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். ஆனால் அதை மாற்றி செய்தி போட்டுள்ளனர்,” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.