திரையுலகம் தூங்காநகரம் ஹீரோ ரொம்ப உஷார்…

தூங்காநகரம் ஹீரோ ரொம்ப உஷார்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிரும் காலை 10 மணிக்கு ஒளிப்பராகி வந்த ‘வாங்க பேசலாம்’ நிகழ்ச்சி 50வது எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் ஞாயிறு மாலை 6 மணிக்கு புதுப்பொலிவுடன் ஒளிப்பரப்பாக உள்ளது.

வரும் ஞாயிறு மாலை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்து ஓடிகொண்டிருக்கும் ‘தூங்காநகரம்’ படத்தின் நாயகன் விமல் மற்றும் அப்படத்தின் இயக்குநர் கெளரவ் கலந்து கொண்டு தூங்காநகரம் படத்தை பற்றியும், படப்பிடிப்பில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

தூங்காநகரம் படப்பிடிப்பின் போதுதான் நடிகர் விமல் தனது முறைபெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதை பற்றி கூறிய விமல், தனது மாமாவிற்கு தனது பெண்ணை ஒரு நடிகருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லாமல் வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்ததாகவும், அதனால் வேறு வழியில்லாமல் அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

என்ன தான் திருமணம் செய்து கொண்டாலும் தனது மாமாவிற்கு தெரியாமல் திருமணம் செய்தது தவறு என்று தற்போது உணர்வதாக கூறிய விமல், அதற்காக மாமவிடம் இந்நிகழ்ச்சியின் மூலமாக மன்னிப்பு கேட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.