அரசியல் அரங்கம் காற்று வீச ஆவேசம் ஆன குஷ்பூ…

அரங்கம் காற்று வீச ஆவேசம் ஆன குஷ்பூ…

Kushboo

கலைமாமணி விருது வழங்கும் விழாவில் நடிகை குஷ்பு திடீரென ஆவேசப்பட்டார்.

திமுக, அதிமுக கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது வேண்டப்பட்டவர்களை குளிர்விக்க கலைமாமணி விருதை பயன்படுத்தி வந்துள்ளன. விதிவிலக்காக தகுதி உள்ள சிலருக்கும் இவ்விருது கிடைக்கும். கலைமாமணி விருது பெறுவதைவிட அதனை மறுப்பதே மதிப்பு என்ற நிலைக்கும் சிலர் தள்ளப்பட்டுள்ளனர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இந்த விருதை மறுக்க வேண்டும் என பல எழுத்தாளர்கள் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டனர்.

இந்தமுறை ஆர்யா, அனுஷ்கா, தமன்னா போன்ற கலையுலக வித்தகர்களுக்கும் கலைமாமணி கிடைத்தது. விருதை பெற்றுக் கொண்டவர்கள் வீட்டைப் பார்த்து நடையைகட்ட, அரங்கம் வெறிச். இத்தனைக்கும் விருது கொடுத்த முதல்வர் கருணாநிதி இறுதியுரை ஆற்றவில்லை. குஷ்புவுக்கு இது பொறுக்குமா?

விருது கொடுத்த முதல்வர் இன்னும் பேசவில்லை, அதற்குள் எப்படி அரங்கத்தைவிட்டு வெளியேறலாம் என திடீர் ஆவேசப்பட்டார்.

எம்எல்ஏ சீட் கிடைத்தாலும் கிடைக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.