திரையுலகம் நயன்தாராவின் அடுத்தடுத்த சந்தோசங்கள்…

நயன்தாராவின் அடுத்தடுத்த சந்தோசங்கள்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

தனது கள்ளக் காதலரை கணவராக்கிக் கொள்ளும் நாள் வெகு சீக்கிரம் வரப்போகிறது என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பே தெரிந்து கொண்டார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து நான்கு மொழிகளில் வெளிவந்த நான்கு படங்களுமே சூப்பர் ஹிட்! இந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும்படி இருந்தது ரமலத்தின் விவகாரத்துக்கான சம்மதம். இந்த இரண்டு சந்தோஷத்தையும் தாண்டி இன்னொரு சந்தோஷமும் வந்து சேர்ந்திருக்கிறது நயன்தாராவுக்கு.

அதுதான் சினிமாவுக்கே முழுக்கு! எவ்வளவுதான் பணம் குவிந்தாலும், நடிப்பதிலிருந்து விலகுவதைதான் மனமார விரும்புகிறார்கள் நடிகைகள். இதற்கு நயன்தாராவும் விதிவிலக்கல்ல. சில தினங்களுக்கு முன் இந்த நான்கு மொழி முன்னணி நாயகர்களுக்கும் நயன்தாராவிடமிருந்து எஸ்எம்எஸ் வந்ததாம். அதில், விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து தரப்போகிறேன். நேரம் ஒதுக்க தயாராகுங்கள் என்று கூறியிருந்தாராம்.

தன்னை வைத்து படம் எடுத்தவர்கள், தன்னுடன் சேர்ந்து நடித்தவர்கள் என்று அத்தனை பேரையும் இந்த விருந்துக்கு அழைக்கப் போகிறாராம் நயன்தாரா. சினிமாவை விட்டு விலகிப்போன எந்த நடிகையும் இப்படி ஒரு பார்ட்டியை இதற்கு முன்பு நடத்தியதில்லை. அதை செய்து காட்டிவிட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறாராம் நயன். இந்த பார்ட்டி அநேகமாக ஐதராபாத்தில் நடக்கும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.