திரையுலகம் விமலின் ஆக்சன் அதிரடி…மிரண்டு போன உறவினர்கள்…

விமலின் ஆக்சன் அதிரடி…மிரண்டு போன உறவினர்கள்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

களவாணி விமல் தனக்கு பிடித்த பெண்ணை கும்பகோணத்திற்கு வரவழைத்து அங்குள்ள சுவாமிமலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பெற்றோர்களுக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்தாலும், அவர்கள் சம்மதத்துடன் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவேன் என்று கூறியிருக்கிறார் இந்த விமல்.

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளவே அஞ்சுவார்கள் ஹீரோக்கள். ஆனால் காதலுக்கு முன் மார்க்கெட் நிலவரம் ஒன்றும் பெரிசில்லை என்று விமல் நினைத்திருப்பார் போல.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார் அவரது முறைப்பெண் பிரியதர்ஷினி. விமலுக்கும் இவருக்கும் காதல் என்பது பெற்றவர்களுக்கு தெரியுமாம். ஆனால் சினிமாக்காரனுக்கு என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்று கூறிவந்தார்களாம் அவர்கள். சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவசரம் அவசரமாக மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்தார்களாம்.

திருமணம் முடிந்ததும் மனைவியை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தாலும் கும்பகோணத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த எத்தன் படப்பிடிப்பு இன்றோடு முடிவடைவதால் இன்று மாலையே விமல் சென்னை திரும்புகிறார். புது மனைவியை சந்திக்கதான் இந்த பயணம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி