அரசியல்,முதன்மை செய்திகள் சிபிஐ ரெய்டு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே – பாஜக

சிபிஐ ரெய்டு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே – பாஜக

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சுரேஷ் கல்மாடி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டிருப்பது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே என்று பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, அப்போதைய காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான சுரேஷ் கல்மாடிக்குச் சொந்தமான டில்லி மற்றும் புனேவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் காலை 7 மணி முதல் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.

முறைகேடுகளில் சுரேஷ் கல்மாடி ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியே கூறும்போது, அவரைக் கைது செய்யாதது ஏன் என்று பாஜ செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2 மாதத்திற்கு முன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஷ் கல்மாடி கூறியதாவது , தான் தூய்மையானவன் என்றும், என்மீது குற்றம் சாட்டப்பட்டால், தூக்குமேடை ஏறவும் தான் தயாராக இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி