திரையுலகம் ரஜினியை கவர்ந்த மன்மதன் அம்பு வசனங்கள்…

ரஜினியை கவர்ந்த மன்மதன் அம்பு வசனங்கள்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

உலகநாயகன் கமல். திரிஷா ஜோடியாக மாதவன் மற்றும் பலர் நடித்த மன்மதன் அம்பு படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை நடிகர்-நடிகைகளுக்கு கமல் நேற்று மாலை பிரத்தியேகமாக திரையிட்டு காண்பித்தார். ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தில் உள்ள மினி தியேட்டரில் இது திரையிடப்பட்டது.

ரஜினி கலந்து கொண்டு படம் பார்த்தார். பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் படம் பார்த்தார்கள். படம் முடிந்ததும் கமல் கையை பிடித்துக் கொண்டு அபாரமாக நடித்துள்ளீர்கள் என்று ரஜினி பாராட்டினார். வசனம் பிரமாதமாக இருப்பதாக சொன்னார்.

குறிப்பாக ஒரு காட்சியில் திரிஷாவிடம் மாதவன் “இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்” என்பார் அதற்கு திரிஷா, “உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி சொன்னார்.

இன்னொரு இடத்தில் வீரத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா? மன்னிக்கிறது. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அஹிம்சை என்று கமல் பேசும் வசனமும் ரஜினியை ஈர்த்தது. கைதட்டி ரசித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி