அரசியல்,முதன்மை செய்திகள் எதிர்பார்த்தது போல் மருத்துவமனையில் தஞ்சமடைந்த ராசா…

எதிர்பார்த்தது போல் மருத்துவமனையில் தஞ்சமடைந்த ராசா…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper,Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வழக்கில் விசாரணைக்கு வருமாறு சிபிஐயால் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் திடீரென்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.

மேலும் சிபிஐ கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் ராசா.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் தொடர்பான வழக்கில் வரும் புதன்கிழமை விசாரணைக்கு வர வேண்டும் என ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. சிபிஐயின் சம்மனைப் பெற்றுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில், கடும் காய்ச்சல் என்று கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராசா.

மேலும் அவருக்கு கடும் உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம் என சந்தேகப்படுவதால் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

முன்ஜாமீனுக்கும் முயற்சி:

இதற்கிடையே, சிபிஐ விசாரணையின்போதே, ராசா கைது செய்யப்படக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், முன்ஜாமீனுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி