திரையுலகம் ஆட்டோவில் வந்திறங்கி அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா

ஆட்டோவில் வந்திறங்கி அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 2 ஆயிரம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர்.
ஆனாலும் பிரியங்காவின் நடவடிக்கைகள் எளிமையாகவே இருக்கும். மனித நேயமும், சமூக சேவை சிந்தனையும் உள்ளவர் என்று மும்பை பட உலகினர் அவரை பாராட்டுவது உண்டு. புதுமுக நடிகர்களுடனும் “ஈகோ” பார்க்காமல் ஜோடியாக நடித்து வருகிறார்.

பிரியங்காவின் எளிமையை உணர்த்தும் சம்பவம் மும்பையில் நடந்தது. அங்கு நட்சத்திர ஓட்டலில் தனியார் நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பிரியங்கா சோப்ரா அழைக்கப்பட்டு இருந்தார். அவர் வந்த கார் நடுவழியில் பிரேக்டவுன் ஆகி நின்றது. வேறு காருக்காக அவர் காத்திருக்கவில்லை.

காரை விட்டு இறங்கி அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தினார். அதில் ஏறி விழா நடந்த இடத்துக்கு சென்றார். பிரியங்கா ஆட்டோவில் வந்து இறங்குவதை கண்ட கூட்டத்தினர் வியப்படைந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி