திரையுலகம் சமுத்திரக்கனியை பெண்டு எடுத்த ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமார்…

சமுத்திரக்கனியை பெண்டு எடுத்த ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமார்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தர சுப்ரமணியபுரம் சசியும் நாடோடிகள் சமுதிரக்கனியும் இணைந்து படங்களை எடுப்பது கோலிவுட்டில் வாடிக்கையாக உள்ளது.
தற்போது வெளியாகும் ஈசன் படத்தில் போலிஸ் ரோலில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்துள்ளார் டைரக்டர் சசிகுமார்.

இந்த படத்தில் சமுத்திரகனியோடு தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், அபிநயா, அபர்ணா பாஜ்பாய், வைபவ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

காக்கி சட்டை ரோல் தந்து சசி பாடாய் படுத்தி விட்டதை எண்ணி சமுத்திரகனி, சசியை வெளுத்துள்ளார்.

‘தமிழ் சினிமாவில்’ இதுவரையில் வந்த போலிஸ் கேரக்டர்களை விட இதில் வித்தியாசப்படுத்தியுள்ளார்.

ரொம்ப நிஜமாக உணரலாம். போலிசை நண்பர்களாக நினைக்க வைக்கும். ஹானஸ்ட் போலிஸ் ஆபிசர் ரோல். இதற்காக நிறைய ஹோம் வொர்க் பண்ண வைத்தார். வெய்ட் போட்டேன்.

ஜிம்முக்கு போய் வியர்வை வழிய ‘வொர்க் அவுட்’ பண்ண வேண்டியதாகவும் இருந்தது. முறைப்படி போலிஸ் ட்ரெயினிங் போயிட்டு வந்த பீலிங் இருக்கு.

என்னை இந்த ரோலுக்காக ஒரு வழியாக்கிட்டார் சசி. தொடர்ந்து நாங்க ஹிட் தருவதால் ஈசன் படத்துக்காக அந்த ப்ரஷர் உணர்வில் இருந்துள்ளோம்.

வெற்றிக்காக உழைத்துள்ள எங்களுக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். கோலிவுட் ரேசில் வர தொடர்ந்து ‘ஹிட் தருவது அவசியமாக உள்ளது’ என்கிற சமுத்திரக்கனி மதுரை மண்ணில் சசியுடன் இணைந்து ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

தெலுங்கு பட உலகிலும் வெற்றி தடம் பதிக்க போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி