திரையுலகம் இல்லாத எக்ஸ்பிரஷனை வம்படியாய் இழுக்க நினைத்த வடிவேலு

இல்லாத எக்ஸ்பிரஷனை வம்படியாய் இழுக்க நினைத்த வடிவேலு

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நாலு லட்சம் என்பது வடிவேலுவை பொறுத்தவரை நாக்கு வழிக்கிற செலவுதான். ஆனால் குய்யோ முறையோ என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறாராம். வேறென்ன… இவர் கட்டிய நாலு லட்சம் பாழாப்போச்சே என்ற வருத்தத்தை விட பையன் இப்படி சோம்பேறியா இருக்காரே என்பதால்தான்.

பையனுக்கு ஒரு ‘ஹிட்’டோரியல் வேணும்னு நினைச்ச வடிவேலு, அவரை டுட்டோரியலுக்கு அனுப்புற மாதிரி நினைச்சு கூத்து பட்டறைக்கு அனுப்பி வைச்சார். அதற்காக கட்டிய முன் பணம்தான் இந்த நாலு லட்சம். இரண்டே நாட்கள் மட்டும்தான் பயிற்சிக்கு போனாராம். அட போப்பா என்று கூறிவிட்டார் மூன்றாம் நாள்.

எள்ளுன்னு சொன்னா எண்ணையாகவும், முள்ளுன்னு சொன்னா கத்தியாகவும் நிக்கிற அளவுக்கு சுறுசுறுப்பானவர் வடிவேலு. ஆனால் அவர் வாரிசு அப்படியில்லை. பெரிய டைரக்டர்கள் சிலர் வடிவேலுவின் பையனை வச்சு படம் எடுக்கலாம்னு வந்து “ஐயய்யோ… இப்படி இருக்காரே” என்று ஓடுகிற அளவுக்குதான் இருந்ததாம் அவரது பர்பாமென்ஸ். எந்த விஷயத்தை சொன்னாலும் சவசவ என்று கேட்டுக் கொள்கிறாரே தவிர நோ எக்ஸ்பிரஷன். இதையெல்லாம் மனதில் வைத்த வடிவேலு, அவரை கூத்து பட்டறைக்கு அனுப்ப அதுவே பெரிய கூத்தாகிப்போனது. தாயும் புள்ளையும் ஒரே நீளத்தில் பாயணும்னா, குட்டி கங்காருவா இருக்கணும். வேற வழியே இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி