அரசியல்,முதன்மை செய்திகள் ராஜபக்ஷேவை கைது செய்ய லண்டன் போலீஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு

ராஜபக்ஷேவை கைது செய்ய லண்டன் போலீஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால் அவர் அப்பதவியில் இருந்து இறங்கும் தறுவாயில் அவரைக் கைதுசெய்யும் உரிமை பிரித்தானிய சட்டத்தில் உள்ளது.

மற்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாழியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் பிரித்தானியப் பொலிசார் அந்த வழக்கை மூடப்போவது இல்லை. அது தொடர்ந்தும் திறந்த ஒரு வழக்காகவே இருக்கும். இக் காரணத்தால் மகிந்த பிரித்தானியா பக்கம் தலைவைத்தே படுக்கமுடியாத நிலை தோன்றலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி