திரையுலகம் நள்ளிரவு நேரத்தில் மும்பை வீதிகளில் சமீரா

நள்ளிரவு நேரத்தில் மும்பை வீதிகளில் சமீரா

Tamil, Tamil News,Tamil News paper,   Tamil Newspaper, Tamil daily news paper,   Tamil daily newspaper,Tamilnadu   politics,kollywood,Tamil Cinema

“வாரணம் ஆயிரம்” ஹீரோயின் சமீரா ரெட்டியிடம் காதல் வலையில் விழுந்திருக்கிறீர்களா? என்றதற்கு பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது,

நான் நிறைய பேரிடம் பழகி இருக்கிறேன். ஆனாலும் யாருடனும் நெருக்கமான உறவு இல்லை. எனக்கு ஏற்ற நபர் எப்போது கிடைப்பார் என்று காத்திருக்கிறேன். விரைவில் கவுதம் இயக்கத்தில் நடித்துள்ள “நடுநிசி நாய்கள்” ரிலீஸ் ஆகிறது. நடு இரவு நாளொன்றில் இளம்பெண் ஒருத்தி சந்திக்கும் சம்பவங்கள்தான் கதை. சேரின் நுனிக்கு வரவழைக்கும் அளவுக்கு த்ரில்லாக இருக்கும்.

அடுத்து “வேட்டை” படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். பிரபு தேவா இயக்கத்தில் விஷால் ஜோடியாக ஒரு படம் நடிக்கிறேன். இந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்து வருகிறேன். விஜயசாந்தி பாணியில் இதுவொரு ஆக்ஷன் படம். நிறைய சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். இப்படத்துக்காக மோட்டார் சைக்கிள் ஒட்ட வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன். இப்போது நள்ளிரவு நேரத்தில் மும்பை வீதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் என்னை பார்க்கலாம் என்கிறார் சமீரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி