திரையுலகம் பி.வாசுவின் ‘ஆக்சன்’ தங்காமல் வெங்கடேஷிடம் திருப்பி விட்ட ரஜினி

பி.வாசுவின் ‘ஆக்சன்’ தங்காமல் வெங்கடேஷிடம் திருப்பி விட்ட ரஜினி

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

கதையை எழுபது சதவீதம் முடிச்சிட்டேன். இனி கொஞ்சம்தான் என்கிறார் பி.வாசு. குப்புற தள்ளிய குதிரையாக போய்விட்டது குசேலன். இந்த முறை அதிர அதிர இருக்கணும் நம்ம ஸ்டெப் என்று அவர் நினைப்பதால்தான் இத்தனை மெனக்கீடு! சந்திரமுகி பார்ட்-2-தான் பி.வாசுவின் அடுத்த டார்கெட்!
தமிழில் இப்படத்தை தயாரிக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை நிறைவேற்றுவது போல இருக்க வேண்டும் ஒவ்வொரு காட்சியும். அதிலும் ரஜினியிடம் கதை சொல்லும் போது அவர் உடனே சரி சொல்கிற அளவுக்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தாராம். ஆனால் கதையை கேட்ட ரஜினி, “இந்த படத்தை நீங்க தெலுங்கு வெங்கடேஷை வச்சு பண்ணலாமே…” என்று ஐடியா கொடுத்தாராம்.
அதனால் முதலில் இந்த கதையை எடுத்துக் கொண்டு தெலுங்கு பக்கம் போகப் போகிறார் பி.வாசு. இது டபுள் ஆக்ஷன் கதையல்ல. `ட்ரிபிள்` ஆக்ஷன் கதையாம். வெங்கடேஷ் மூன்று வேடத்தில் நடித்தால் அதிரடியாக இருக்கும் என்பது ரஜினியின் எண்ணம். ரஜினியின் யோசனையை நிறைவேற்ற தயாராகிவிட்டார் பி.வாசு. ஆனால் வெங்கடேஷை புக் பண்ணுவதற்கு முன்பே அனுஷ்காவை சந்தித்து கதையை சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி