திரையுலகம் சுந்தர்.சி எடுத்த பெரிய முடிவு…

சுந்தர்.சி எடுத்த பெரிய முடிவு…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

எரிச்சலில் இருக்கிறார் சுந்தர்சி. தமிழ்சினிமாவில் எத்தனையோ ஹிட் கொடுத்திருக்கேன். என்னால சம்பாதிச்ச விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனால் என் மனைவி தயாரித்து, நான் இயக்கி நடித்த நகரம் படத்தை வாங்க ஒரு விநியோகஸ்தர்கள் கூட என் ஆபிஸ் வாசலை மிதிக்கவில்லையே என்கிறாராம்.

குஷ்புவுக்கும் இதில் பெரிய வருத்தம்தான். கடந்த வாரம் வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாக இந்த படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்றாலும், தமிழகம் முழுவதும் இந்த படத்தை சொந்தமாகவே ரிலீஸ் செய்த சுந்தர்சி போட்ட பணத்தை திரும்ப எடுத்துவிட முடியுமா என்ற கவலையில் இருக்கிறார்.இந்த நேரத்தில் அவர் எடுத்திருக்கும் மிக முக்கியமான முடிவு, இனிமேல் சொந்தப்படம் எடுக்கவே மாட்டேன் என்பதுதான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி