அழகான பொண்ணு அழுதா யாரால்தான் தாங்கிக்கமுடியும்… யாரால தாங்க முடியுமோ முடியாதோ நம்மால தாங்க முடியாது… சரி விஷயத்துக்கு வருவோம். இயக்குநர் களஞ்சியம் தானே இயக்கி நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘கருங்காலி’. படத்தின் பெயர்தான் கருங்காலின்னு பார்த்தா ஆளும் நெஜமாவே கருங்காலியாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. படத்தின் கதைப்படி அஞ்சலி தான் இவருக்கு மனைவி. புதுப் பொண்டாட்டியான அவரை ஏதோ ஒரு காரணத்திற்காக கை நீட்டி அடிக்கும் காட்சி. காட்சியின் ஸ்டாட்ர்டிங் எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனால் பினிஷிங் தான் சரியில்லாமல் போனது. காரணம், படத்தின் காட்சியோடு ஒன்றிப் போய்விட்ட களஞ்சியம் அஞ்சலி கன்னத்தில் டம்மியாக அடிப்பதற்கு பதில் நெஜமாகவே ஒரு பளார் விட்டிருக்கிறார். அப்புறம் என்ன, அஞ்சலி ஓ வென அழாவிட்டாலும் அவர் கண்களில் பொலபொலவென கண்ணீர் வந்துவிட்டதாம்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி