திரையுலகம் விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்

விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்

madavan

விஜய் தற்போது நடித்து வரும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு அடுத்து விக்ரம் கே. குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தை ஏ. எம். ரத்னத்தின் சூர்யா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விக்ரம் கே. குமார் அடுத்ததாக இயக்கும் படம் மாதவனுடன்தான் என்பதே இப்போதைய தகவல்.

‘அதிர்ஷ்டசாலி’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை தயாநிதியின் கிளௌட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தைக் காட்டித்தான் மாதவனிடம் வேட்டை படத்திற்கான கால்ஷீட்டை தயாரிப்பு தரப்பு வாங்கியுள்ளதாகவும் திரைவட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

கிளௌட் நைன் தயாரிப்பில் லிங்குசாமின் இயக்கத்தில் வேட்டை படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்க மாதவன் சம்மதித்துள்ளதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது.

வேட்டைப் படத்தில் மாதவன் ஆர்யாவிக்கு வில்லத்தனமான அண்ணனாக நடிக்கிறாராம். ஆயுத எழுத்தில் பேசப்பட்டது போன்ற நெகட்டிவ் கேரக்டராம் மாதவனுக்கு. எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மாதவன். அதுவும் போக சாக்லெட் ஹீரோவான மாதவன் ஆக்‌ஷன் ஹீரோவாக பேசப்பட்டது லிங்குசாமியின் ‘ரன்’ படத்தின் மூலம்தான். இவையெல்லம்கூட காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ, யாவரும் நலம் படத்திற்கு பிறகு மாதவன் – விக்ரம் கே. குமார் ‘அதிர்ஷ்டசாலி’களாக இணைந்துள்ளனர்.

யாவரும் நலம் திரில்லரான படம். ஆனால் இந்தப் படம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதை. ‘அதிர்ஷ்டசாலி’ முழுநீள காமெடிப் படமாம்.

இந்தப் படம் முடிந்தவுடன் விஜய் – விக்ரம் கே. குமார் கூட்டணியில் ‘24’ என்னும் படம் உருவாகலாம் என கூறப்படுகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி