திரையுலகம் கதாநாயகி இல்லாமல் உருவாகும் படம்

கதாநாயகி இல்லாமல் உருவாகும் படம்

withoutheroine

இரண்டு, மூன்று, ஐந்து என ஒரே படத்தில் டஜன் கணக்கில் கூட ஹுரோயின்களை வைத்து படம் எடுப்பார்கள் தமிழ் சினிமா படைப்பாளிகள். அந்த வரிசையில் சற்று மாறி தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக கதாநாயகியே இல்லாமல் ஒரு படம் உருவாகிறது.

பெயர் வைக்கப்படாத இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஸ்ரீ சூர்ய கமல் மூவிஸ் நிறுவனம் சார்பில் சுப்பாரெட்டி தயாரிக்கும் முதல் படம் இது. காவல்துறையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் சாய்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் புதுமுகம் கம்லாகர், ஆஷிஷ்வித்யாதி, சுப்ரீத், காதல் தண்டபாணி ஆகியோர் நடிக்க பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறாராம்.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சின்னா இசையமைக்க, ஜான் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் ரமணா, இயக்குநராக அறிமுகமாகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி