திரையுலகம் எந்திரன் கண்ணீர் விட்டு அழுத ஷங்கர்

எந்திரன் கண்ணீர் விட்டு அழுத ஷங்கர்

Director_Shankar1

தனது 10 ஆண்டு கால கனவை 3 ஆண்டு உழைப்புடன் எந்திரப் பிரமாண்டமாய் நினைவாக்கிவிட்ட ஷங்கருக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

அப்படி வரும், பாராட்டுக்கள் தன்னை பரவசப்படுத்தி ஊக்குவிப்பதாக கூறி, அந்தப் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷங்கர்.

இதோ ஷங்கரின் நன்றி கடிதம்…

எல்லோருக்கும் வணக்கம்,

‘எந்திரன் தி ரோபோ’ இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்திரனின் போஸ்ட் ப்ரெடெக்ஷன், விளம்பரம், தியேட்டர் விசிட்களால் என்னால் உங்களை நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தப் படத்தை ரசித்து பாராட்டி வரும் எல்லோருக்கும் நன்றி, குறிப்பாக ஊடகங்களுக்கு.

எந்திரனை பாராட்டிய ஊடகங்கள் பெரும்பாலும் 5 ஸ்டார்களும் மற்றவர்கள் 4 முதல் 5 வரை ஸ்டார் கொடுத்து எங்களை ஊக்குவித்துள்ளார்கள்.

இந்தப் படம் தென்னிந்தியா, வட இந்தியா மேலும் உலகம் முழுக்க செய்து வரும் வசூல் சாதனைகள் எங்களை மேலும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

படம்பார்த்த இந்தியாவின் பெரிய நடிகர்கள் அனைவரும் நேரிலும் போனிலும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

படம் பார்த்த அமீர்கான் என்னை வீட்டுக்கு ஆழைத்து விடியும் வரை அவரும்அவர் மனைவி கிரணும் இந்த படம் பற்றி என்னிடம் விசாரித்தார்கள்.

ஹிருத்திக் ரோஷன் தொடர்பு கொண்டு படம் பார்த்த பரவசத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

கமலஹாசன் அற்புதமான வாழ்த்து செய்தியுடன் பூங்கொத்து ஒன்றையும் பரிசளித்தார்.

கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, பிரகாஷ்ராஜ், டைரக்டர்கள், உதவியாளர்கள், டெக்னிஷியன்கள் அனைவரும் படம்பார்த்து பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்..

என்னை பரவசப்படுத்திய பாராட்டு என்றால் கே. பாலசந்தரிடம் இருந்து வந்த பாராட்டு கடிதம்தான். 30 வருடமாக ஒரு சிறந்தவெற்றியாளராக தமிழ் சினிமாவில் திகழ்பவர் அவர்.

என்னுடைய ரோல் மாடலான அவரைப்போல் நானும் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது இந்தத் துறையில் இருக்கவேண்டும் என நினைப்பேன்.

அவரின் பாராட்டு கடிதம் என்னை மிகவும் நெகிழச் செய்தது. அவரின் பராட்டுக் கடிதத்தை படிக்கும் போது ஆனந்தக் கண்ணீர் தோன்றியது. அதை என்னால் அடக்க முடியவில்லை.

அவரின் பாராட்டு எனக்கு ஊக்கம் தந்து, என்னை இன்னும் கடினமாக உழைக்க தூண்டி உள்ளது.

இப்படி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷங்கார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி