அரசியல் 'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ

'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ

vaiko

சர்வதேச போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘தமிழினக் கொலையாளி’ ராஜபக்சேவை அழைத்து இந்திய அரசு கவுரம் செய்தது, மன்னிக்க முடியாத குற்றம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரையில் இலங்கை தமிழர்கள் போரினால் பட்ட துயரங்களை சித்தரிக்கும் போர் முகங்கள் என ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐ.நா. அவை, ஐரோப்பிய ஓன்றியம் போன்றவை இலங்கை அதிபர் ராஜபக்சேவை, பன்னாட்டு போர் குற்றவியல் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இந்திய அரசோ, இலங்கை தமிழர்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகளில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து, பிரதமர் மன்மோகன் சிங் அருகில் நாற்காலியை போட்டு அமர வைத்திருக்கின்றனர். ஒரு கொலைகாரனுக்கு பிரதமர் தரும் மரியாதை இது. நிச்சயம் இது மன்னிக்க முடியாத செயல். இந்திய அரசை தமிழக மக்களும், இலங்கை தமிழர்களும் மன்னிக்கவே மாட்டார்கள், என்றார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி