திரையுலகம்,முதன்மை செய்திகள் கோடிகளில் புரண்ட எந்திரன்

கோடிகளில் புரண்ட எந்திரன்

Enthiran-300x231

த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

ரூ 162 கோடி செலவில் தமிழில் எந்திரனாகவும், தெலுங்கு – இந்தியில் ரோபோவாகவும் ரஜினியின் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

அனைத்து மொழிகளிலும் எந்திரன் ரூ 200 – 225 கோடியை இரண்டே வாரங்களில் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.

இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை வேறு எந்தப் படமும் இந்த அளவு வசூலை அதுவும் இரண்டே வாரங்களில் எடுத்ததில்லை.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், தமிழில் மட்டும் இரண்டு வாரங்களில் எந்திரன் ரூ 150 கோடியை வசூலித்துள்ளதாகவும், தெலுங்கு மற்றும் கேரள – கர்நாடக பகுதிகளில் ரூ 50 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகவும், இந்தியில் ரூ 15 கோடி (ரூ 31 கோடி என்கிறார் மற்றொரு விநியோகஸ்தர்) வசூலித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ரூ 400 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலைக் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள் சிலர். கர்நாடகத்தில் இரண்டே வாரங்களில் ரூ 10 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளதாகவும், இன்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாகவே எந்திரன் ஓடுவதாகத் தெரிவித்தார் பெங்களூரைச் சேர்ந்த விநியோகஸ்தர் சுதாகர்.

25 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று முதலில் பிடிவாதமாக இருந்தது கர்நாடக பிலிம்சேம்பர். ஆனால் குவியும் வசூலைப் பார்த்த பிறகு, அமைதியாக 60க்கும் மேற்பட்ட திரையரங்களில் எந்திரனை அனுமதித்துள்ளனர்.

இரண்டாவது வார முடிவில் வெளிநாடுகளில் எந்திரன் வசூல் விவரமும் வெளியாகியுள்ளது. எந்திரனுடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானியின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட, எந்திரன் மட்டும் கூடுதலாக 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

இந்த வாரம் வெளியான வேறு எந்தப் படமும் எதிர்ப்பார்த்த வசூலைப் பெற முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிலவரம்:

வட அமெரிக்கா- 24,00,000 டாலர்கள் (10 நாள் கணக்கு)
பிரிட்டன் – 7,80,000 டாலர்கள் (10 நாள்)
மலேசியா -29,00,000 டாலர்கள் (11 நாள்)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி